பிரார்த்தனை - ஒரு வேண்டுகோள் !

அகத்திய உள்ளங்களே !!
மிகப்பெரும் மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரமும் மிக கடினமாக பாதிக்கப்பட்டது என்பது தாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.இன்னும் சில பகுதிகள் வெள்ள நீர் வடியாமல் தொழில்துறைகள் ,அதில் வேலைபார்க்கும் அன்பர்கள் ,தங்கள் உடைமைகள்,உறைவிடங்கள், யாவும் இழந்து,மிகுந்த பாதிப்புக்குஉள்ளாகி,கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறார்கள்.அகத்திய உள்ளங்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை எவ்விதமேனும் பொருளோ,உடையோ அல்லது ஏதேனும் ஒரு வகையில்  உதவி செய்யுங்கள் என  உள்ளன்போடு வேண்டுகோள் வைக்கிறோம்.அகத்திய உள்ளங்கள் அனைவரும் எங்கெங்கு இருந்தாலும் மனதால் ஆழ்ந்து அய்யாவை வணங்கி ,பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும்  உள்ளத்தால் நெஞ்சம் நிறைந்து வாழ்த்தி ,அவர்கள் இயல்பு வாழ்கை விரைவில் மீண்டெழுந்து மக்கள் யாவரும் சுபிட்சமாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்யவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆதவனின் காந்த அலைக்கதிர்களும்,,சனிகிரகத்தின் காந்த அலைக்கதிர்களும் ,பாதிக்கபட்ட  சென்னைக்கும்,மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்குமாறும்,துயரத்தால் வாடும் மக்களுக்கு, அசைக்க முடியா நம்பிக்கையும் ,மன தைரியத்தையும் இறைவன் அவர்களுக்கு வழங்கவேண்டுமென பிரார்த்தனை செய்யவேண்டுமாறு பணிவோடுகேட்டுக்கொள்கிறோம்.

ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!
ஒம் அகத்தீஸ்வராய நமஹ !!!


Comments

Popular posts from this blog

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

ஸ்ரீ குட்டையா ஸ்வாமிகள் - மதுரை

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்