Posts

Showing posts from 2013

தென்பொதிகை கைலாயம்

Image
அன்புள்ள   அகத்திய  நெஞ்சங்களை  ஒரு சிறிய  இடைவெளிக்கு  பின்  மீண்டும் சந்திப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன் .கால சக்கரம்  சுழல சுழல மாற்றம்  ஒன்றன் பின்  ஒன்றாக அரங்கேறுகிறது .எத்தனை தலைமுறை  கர்ம வினைப்பதிவுகள்  அச்சு பிறழாமல் மிக  அழகாக செயல்படும்  விந்தை .செய்த புண்ணியம்  பாவம்  அனைத்தும் சூட்சும  செல்களில்  பதிந்து அதனதன் விளைவுகளை நடத்திக்காட்டும்  அற்புதம் .எப்படி  வாழ்க்கை  இப்படி  உள்ளது ,ஏன்  இந்த உடல்,மனம்  அழுத்தம்  தரும் பதிவுகள் ? யார் இதனை தீர்மானிப்பது?கடந்த கால பதிவுகளுக்கு  யான்  என்ன  செய்ய முடியும் ? எம்  எண்ணம் அறிவு  இவை  மீறியும் வந்து  ஆட்டிப் படைப்பது  ஏன்  ? அத்தனையையும் அனுபவிக்க  வேண்டியது  தான் .இறைவனின்  ஆணை !இம்மி  பிறழாமல்  நீதி வழங்கும்  ஈசனின்  உத்தரவு !இனி  வரும்  காலங்களில் அமைதி உருவாக்குவோம் ! மனம்  விரும்பி இறை அலைகளை ஏற்றுக்கொள்வோம் .இருக்கும் பதிவுகள் தாக்கம்  குறைய எம்  தந்தையின்  திருவடி பணிவோம் !இளைப்பாற  நிழல்  தரும்  எம் தந்தையின் கருணை  அலைகள்  ,எப்பதிவையும்  அதன்  மூல  வேரையும் உள்நோக்கி ஆராய்ந்து  அதன்  தாக்கத்தை  குறைக்கும் சக்தி மிக்க  அ

அகத்தீசனடி போற்றி.!!

Image
    அன்புள்ள நெஞ்சங்களே ! இங்கே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் !இங்குள்ள நிகழ்வுகள் எல்லாம் இந்த சிற்றறிவிற்கு எட்டியவை மட்டுமே!இன்னும் எத்தனையோ கோடி பிரபஞ்ச ரகசியங்கள் எண்ணி அனுபவிக்க காத்துகிடக்கின்றது.தந்தையின் அரவணைப்பு இங்கே யாம் உணர ஒரு முழு காரணமாகிறது.இனம் அறியாது மொழி அறியாது இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எம்மையும், எம்மைப்போல் உள்ள அகத்திய உள்ளங்களையும், தந்தையின் அன்பும் , கருணையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.இப்படி செல் மகனே என்னும் தந்தையின் வேத வாக்கு,ஒரு தைரியத்தையும் நிறைவையும் அளித்து என்றும் எம்மை சூழ்ந்து அமைதியில் திளைக்க வைக்கிறது. என்ன உள் எழுதிவைக்கபட்டதோ அது கால சுழற்சிக்கேற்ப வெளிவந்து செயல்பட ஆரம்பிக்கும் இறைநிலையின் இயல்பு.எப்படி ஒரு மிக சிறிய ஆலமரத்தின் விதையிலிருந்து,காலத்திற்கேற்ப இலை,தண்டு,கிளைகள்,விழுதுகள் என மிக பிரமாண்ட மரம் வருகிறதோ அது போல, சூட்சும அலைகளால் சுருக்கி எழுதப்பட்ட இறை எழுத்து செயல்பட ஆரம்பிக்கும் விந்தை.இவர்களை போல பொருள்இல்லை,புகழ் இல்லை,இடமில்லை etc போன்ற பொறாமைக்கோ, comparisonக்கோ இங்கே

ஸ்ரீ ராம தேவர் சொரூப சமாதி

Image
அன்புள்ளம் கொண்ட அகத்திய நெஞ்சங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்  சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கால  தாமதத்திற்கு வருந்துகிறேன்.ஸ்ரீ மஹா பைரவர்  கட்டுரையில்  வரும்  பைரவ மந்திரம் சக்தி மிகுந்த நல்ல அதிர்வு அலைகளை தரக்கூடியது. சூட்சும சக்தியை பெருக்கக்கூடியது. நம் சூட்சும உடம்பிலே ஒரு polish  ,இறை சக்தியால் ,பைரவ சக்தியால் மெருகேற்றப்படுகிறது. எப்பொழுதும் நம்மை தொட்டுக்கொண்டே,எங்கெங்கு சென்றாலும் நம்முடனேயே வருவது நம்  சூட்சும உடல்.நல்ல  அதிர்வு  அலைகள்  நமக்கு  எப்பொழுதும்  நல்ல எண்ணங்களை  தரவல்லது .  இந்த சூட்சும உடல்    எந்த அளவுக்கு ஒருவருக்கு செறிவுள்ளதோ அந்த அளவுக்கு, மனம் நன்கு  வலிமை பெரும் ,நல்ல  திடம் பெறும் ,நல்ல நிறைவு  பெறும்.நல்ல திடமான ,அலைபாயாத நல்ல ஆரோக்கியமான மனதில் தான்,ஒரு தீர்க்க மான முடிவு  எடுக்க முடியும்.நல்ல சரியான முடிவு  எடுக்க தெரிந்தவர்கள் தான் வாழ்க்கையின் உயர்நிலையில் .இன்றைய உலகத்திற்கு மிக மிக  அவசியமானது,இந்த  மிக சரியான  முடிவு எடுத்தல் என்பது. குப்பையான  எண்ணங்களை வேரறுத்து மன விரயத்தை பாதுகாக்க வல்லது பைரவ சூட்சும அதிர்வு அலைகள் .ம