Posts

Showing posts from April, 2016

ஸ்ரீ ஆதிகோரக்கர் நாதர் கோவில் திருப்புவனம்

Image
அழகிய முகமும் சாந்த வடிவும்,அன்பும் கருணையும் நிறைந்தவர்.சித்த ரகசியமெல்லாம் உடைத்தெறிந்தவர்,.மனிதர்களுக்காக தம் நிலை இறங்கிவந்து தாம் பெற்ற நுணுக்கங்கள் ஆற்றல் நுட்பம் அறிவு கொண்டு பேருதவி செய்தவர்.இரக்க குணம் உடைய தயாளன்! எல்லையில்லா கருணை நிறைந்த சித்தர் ஸ்ரீ கோரக்கர் சித்தர் ! ஸ்ரீ கோரக்க மஹாசித்தர்.! இன்றும் திருப்புவனம் கோரக்கநாதர் கோவிலில் இருந்துகொண்டு அருள்ஆசிகள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் !!! கோரக்கர் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஜீவசமாதியாகி இருக்கிறார்கள்.அப்படி ஒரு இடம் தான் இந்த திருப்புவனம் .இங்கே உள்ள ஆதி கோரக்கநாதர் ஆலயம்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் அதாவது மதுரையிலிருந்து 20 km லில்  உள்ளது திருபுவனம் .செவிவழி நிறைய தகவல் கிடைகின்றது.இங்குள்ள ஸ்ரீ புஷ்பவனேஷ்வரரை சந்திக்க வந்த கோரக்கர், சிவனை சந்தித்து  இறைஅலையில் மூழ்கி,அருகிலேயே ஒரு ஆஷ்ரமம் அமைத்து சிவஅருள் தொண்டு செய்துவந்திருகின்றார்கள் என்கிறார்கள். மச்சேந்திரர் எனும் மாபெரும் முனிவர் இறைவழியே தம் வாழ்கையை செலுத்தி,தொடர்ந்து கால்நடையாக பல திவ்விய தேசங்களுக்கு சென்று அங்குள்ள இறைவனை