Posts

Showing posts from July, 2016

தாய் சக்தி

Image
அண்டசராசரங்களை ஈர்த்து ஆள்பவள்.கருணையே வடிவானவள்.எல்லையில்லா  கருணை  நிறைந்த கண்களால் ,தமை பார்க்கும்  எதையும் எவரையும்  அவர் தம் சூட்சும தேகம் வரை  ஆழ்ந்து உட்சென்று ,அதில் உறைந்த அன்பின் தன்மையை  உணர்ந்து ,ஆத்ம ஒளியை பெருக்கி அருள் ஆசி செய்பவள்..திரிகால ஞானம்  கொண்டவள்.பிரபஞ்சத்தில் மிக பிரமாண்ட  கோள்களானாலும் சரி ,மிகச்சிறிய அனுவானாலும் சரி எதுவும் இவள் ஆட்சிபுலத்தில் இருந்து தப்புவதில்லை.நுணுக்கமும் தெளிவும் நிறைந்த பேரொளியாள் அனைத்தையும் ஈர்த்துப்பிடித்து அருள் ஆட்சிசெய்பவள்.அன்பு நிறைந்தவள்.சாந்த ஸ்வரூபி.சகலவித்தைகளுக்கும் அதிபதி.பிரமாண்ட விஸ்வரூபம் கொண்டவள் ஆதி சக்தி ,அன்பின் நாயகி ,அம்பாள் , அகிலாண்டபரமேஸ்வரி , ராஜராஜேஸ்வரி ,திரிபுபன நாயகி  என பல நாமங்களுக்கு சொந்தம் கொண்டவள் .!தாய் எனும்  பெரிய  ஸ்தானதிற்கு  இவளே மூலம்.இவள் கருணையாலே மற்ற எந்த ஒரு உயிரும் தாய் எனும் அங்கீகாரம் பெறுகிறது. சிவனை பற்றி  அறிந்து கொள்ளுதல் எவ்வளவு தெளிவை நம் வாழ்வில் ஏற்படுத்துமோ அந்த அளவிற்கு சிவனின் மற்றொரு வடிவமாகிய சக்தியை பற்றியும் அறிந்து கொள்ளல் நம் வாழ்வை தெளிவுபடுத்தி  வாழ்கையை மிக