Posts

Showing posts from January, 2020

இறை ஜோதி

Image
ஆழ்ந்தும் அமர்ந்தும்  நீண்டும் விரிந்தும் கூர்ந்தும் குறுகியும் எங்கும் எங்கெங்கும் வெளியாய் பேரொளியாய் இருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமானே ! மிகபெரும் பெருவெளியே !! ஓர் நீண்ட நெடிய மூச்சில் விரிந்து நினை அன்பால் கட்டியணைக்க வியல்கிறேன்  ,வீழ்கிறேன் ..பின்பு மீண்டும் எழுகிறேன் ...எம் முயற்சி தொடர்ந்துகொண்டேயிருக்கிறது ..என்றோ நின் பொற்பாதத்தை அடையும் முயற்சியை தொடர்ந்தவண்ணம் இருக்கிறேன். ஆற்றலாய் அலையாய் ஒளியாய் இருக்கும் அருட்பெரும் ஜோதியே !! வெட்ட வெளி ஜோதியே ! ஜோதியில் ஜோதியே ! எம் தந்தையாகிய சத்குருவே ! பரப்பிரம்மமே ! சுத்த பேரொளி சூழ்ந்து  ஒளியாய் ஜொலிக்கும் ஆனந்த பேரின்பமே ! நின் பிரகாசமூட்டும் அற்புத ஒளியை நாள்தோறும் காண எம் செயல்களையும் ,கர்மவினைதாக்கங்களையும் சரிசெய்து, என்றும் நின் அருள் தாண்டவமாடும் அலைகளை எம்முள் உணர  ,வழிவகுப்பாய் ..பேரொளியே ..!! பெரும் பெரும் வற்றாத கருணைஉடைய பேரொளிப்பெருமானே !!!  நின் திருவடியில் என்றும் என்றென்றும் சரணாகதி !! புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அ