Posts

Showing posts from June, 2018

ஸ்ரீ சட்டைநாதர் ஜீவசமாதி - திருவேடகம்

Image
சட்டைநாத சித்தர் ஒரே நேரத்தில் நிறைய இடங்களில் ஜீவசமாதியில் சென்றிருக்கிறார்கள்.திருவேடகத்தில் ஜோதி ரூபமாய் சமாதியில் இருக்கிறார்கள்.எப்பொழுதும் நெய்விளக்கும் எண்ணை விளக்கும் எரிந்துகொண்டிருக்கிறது.இறை அலைகள் நிரம்பி வழிகிறது.அய்யா அவர்கள் வரலாறு   சித்தர் பரம்பரை வழியாக நீண்டு தொடர்கிறது.அய்யா சிங்களத்திலிருந்து பிழைப்புக்காக இங்கே வந்து விவசாயம் தொழில் செய்தார்கள் எனவும்.விவசாயம் நலிய ,கோவிலில் யாசகம் பெற்று தமது தாய் தந்தைக்கு உணவு அளித்துவந்திருக்கிறார்கள்.ஒரு நாள் கோவிலில் யாசகம் எடுக்கும் போது சங்குபூண்ட முனிவர் வடநாட்டிலிருந்து இங்கே வர,அய்யாவும் அவரிடம் சென்று தமது நிலைமையை கூற ,அவரும் எல்லாம் விதியின் வழிதான் செல்லும்,தாய் தந்தையை காப்பாற்றுவது மிக புண்ணியமான செயலாகவும் ,விரைவில் வழிபிறக்கும் அதுவரை சிவன்பால் சிந்தையைவைத்து கடமையை செய் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் அந்த முனிவர்.பிறகு சிவன்மீது சிந்தைவைத்து செயல் புரிய விவசாயம் நன்கு செழித்துவளர்ந்து ,அதை வைத்து தம்மால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கெல்லாம்  உணவு அளித்து தினம் கோவில் சென்று சிவனை வழிபட்டார்கள்.பிறகு திரும