Posts

Showing posts from September, 2015

சிவமும் சிவயோகியும் .!!

Image
இந்த உலகத்தில்  எழுதிவைக்கப்பட்ட வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று நாம் கண்ணால் காணும் காலம் வரை  எத்தனை ,எத்தனை, சிவயோகிகள் ...!! ஒம் நமசிவாய எனும் தாரகமந்திரம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு  சிவத்துள் தம்மை மறந்த எத்தனை எத்தனை  ஆயிரமாயிரம் மகான்கள் ..!!!  அவர் தம் ஜீவசமாதிகள்..!!,இவை தமக்குபிறகும் தொடரவேண்டும் ,சிவமே இறைநிலை ,இறைநிலையே சிவம், என மக்கள் சிவத்தை உணரவழிவகை செய்ய, இவர்கள் சூட்சுமாய் அரூபமாய் இன்றும் ....இன்றும்....இப்பொழுதும் .... இந்த காலகட்டத்திலும்  அன்புள்ளம் கொண்ட ஆத்மாக்களுக்கு வழிநடத்தும், சிவலயத்தில் ஈடுபடுத்தும் ,இவர்கள் கட்டிவைத்த ,எத்தனை எத்தனை  பெருமைமிகு சிவஆலயங்கள்  !!.இம்மண்ணில் பிறப்பெடுத்ததற்கே பெருமை அல்லவா கொள்ளவேண்டும் ..!! அதுவும் புண்ணியவான்கள் அருள்சூழ்ந்த இடத்தில் வசிப்பது,சுவாசிப்பது, இருப்பது ,நடப்பது,என அனைத்தும் ஒரு சுகமான அனுபவமே...அதுவும் அவர்கள் அரவணைப்பில் வாழ்வது இறை அருகே நம்மை தாமாகவே அழைத்துசென்றுவிடும் !! இன்றும் நம்மால் உணரஇயலாத ,சிவலயத்தில் இருக்கும் மகான்கள், இன்றும்.... என்றும்... இவர்கள் யாவரும் சிவத்துள் மூழ்கும் காரணம் த