Posts

Showing posts from January, 2021

இறை அருளாசிகள் ..!!!

Image
கேட்பாரற்று ,கேள்விகள் அற்று ,முடிந்து அமிழ்ந்து ,மூழ்கி,மூழ்கி  யுகங்கள் ஆயிரம் ஆயிரம் போனாலும் , எம் பெம்மானே !! இவை யாவும் அழியாத நின்னுள்ளே  நாள்தோறும் நடந்தேறுகிறது!!ஆனந்த கூத்தனே !! எல்லை இல்லானே ! எத்தகைய வலிமை உடையோன் நீ ?   எம்மை மறந்து, நின்னில் கிடந்து ,அழுது புலம்பி  ஆற்றல் பெற்ற காலம்  யாவும் சுகம்  சுகமே ..எம் பெருமானே !! இருந்தும் கிடந்தும் பரந்தும் விரியும் பெரியோனே !!!.நின் பெருமை எண்ணிடல் என்றென்றும் சொல்ல இயலா சுகமே !! மூழ்கின ! முடிந்தன ! மறைந்தன! எழுந்தென !! என்பதெல்லாம்  நீர்மேல் எழுதும் கணக்கு போல சட்டென  மறைகிறது நீ படைத்த ஜீவராசிகளின் வாழ்க்கை ! பேரமைதியில் பரந்து விரிந்த மாயோனே !! அன்பால் இளகினால் மட்டுமே நின்னை சிக்கென பிடிக்க இயல்கிறது எம் பெருமானே !! இளகும் பாகுபோல எம் நெஞ்சம்  இளகி நின்னை நினைந்து ,அன்பால் ,பரந்து விரிந்து சூழ்கிறது எம்பெருமானே !! வந்தமர்மாய் எம்முள் எம் நெஞ்சத்துள் என்றும் நினை இறுக கட்டியணைக்கவியல்கிறேன் !! வருவாய் எம் நாயகனே !!வந்தமர்வாய்  அதி நுண்ணிய நுட்பம் நிறைந்தோனே  !! வருவாய் எமை ஈன்றவளே !! எம் தாயே !! தந்தையே !! சர்வேஸ்வரனே !!  எ