Posts

Showing posts from January, 2019

உள்ளம் ...உணர்வாய்... இறை

Image
எம்முள் கலந்த சிவமே ..!! நின்னையே அனுதினமும் எண்ணி எண்ணி மகிழ்கிறோம் .ஒவ்வொரு நொடியிலும் தெறித்து ஓடும் நின் அன்பெனும் ஈர்ப்பு நிறைந்த அலைகளை  பிடிக்க முயல்கிறோம்  ..இயலவில்லை பலமுறை ...விடை தெரியா கேள்கிகளுக்கெல்லாம் விடை தரும் வேதாந்த சக்தியே .. அன்பெனும்  அலைகளால் அகிலத்தையே ஈர்த்து அரவணைக்கும் ஆதி மூலமே ..!! பிரபஞ்ச பேராற்றல் நாயகனே.!!!  பேரண்டம் முழுவதும்  நினது அருள் தானே ஆட்சிசெய்கிறது .. ஆனந்தக் கூத்தனே.. அன்பின் நாயகனே..!! அன்பாய் உருமாறியவனே ..!!! என்றுமே வற்றாத  கருணை நிறைந்தவனே..!!! எம் நாயகனே ..!!! எம்பெருமானே.!!  நினையே நினைந்து ..நினையே புகழ்ந்து ...நின் திருவடியில் வீழ்ந்து நின்   திருவடி பணிகின்றோம்..நின் கருணையை என்றென்றும் எமக்கு அருள்செய்வீர்களாக..!!! தாவிக்கொண்டே இருக்கும் மனதிற்கு அதை அறிய முற்பட அடங்கும்.இல்லை எனில் ஒரு  இடத்தில் நிலை கொள்ளாது . எப்படி நமது உடலுக்கு பசி என்ற ஒரு உணர்வு வருகின்ற பொழுது தேவையான உணவுகளை கொடுக்கிறோமோ அது போல மனதிற்கும்  உணவுகள் அன்றாடம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆழ்ந்த இறை சிந்தனை ஒன்று மட்டும் போதும் .ஆனால் இது ஒவ்வொரு