Posts

Showing posts from May, 2020

யாம் எனும் இறை ..!!!

Image
எம்முள்ளே  எங்கும் நிறைந்த  பரம்பொருள்  இறை எனும் அற்புதம் தம் பயணத்தினை தொடர்கிறது.ஒரு மிக பெரிய அற்புதமான எங்குமே நிறைந்த பரம் பொருள்,  சர்வ வல்லமை நிறைந்த ஆற்றல் அது எம்மோடு ஏற்படுத்திய ஒரு  பிணைப்பு,அதனால்  எம் உள்ளத்தில்  ஏற்படுத்திய தாக்கம் அதன் விளைவாக கிடைத்த ஒரு மிகப்பெரும் நம்பிக்கை  இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி மிக அழகாக பயணிக்கவைக்கிறது . எம் தந்தை போல் எமக்கு பின்னால் இருந்துகொண்டு இயக்குவதால் இந்த உயிர் துள்ளிக்குதிக்கின்றது.எங்கும் எங்கெங்கும் வியாபித்து அற்புதமாய் செயல் ஆற்றுகிறது .எவன் ஒருவனுக்கு உயிர் பற்றிய ஞானம் .உயிர் பற்றிய ஒரு தெளிவு இருக்கிறதோ,உயிர்  பற்றிய ஒரு பரந்த அனுபவம் இருக்கிறதோ  அவனுக்கு மரண பயம்  என்றுமே ஏற்படுவதில்லை.மன அழுத்தம் வீண் குழப்பம் எல்லாம் இந்த  பாழாய்போன மனம் வழி, இந்திரியங்கள் வழி செல்வதாலே,கூனி குறுகிய நான் எனும்  அகந்தை , எனது  உடம்பு மட்டுமே ,அழகான இந்த கண்கள் கைகள் எனும் ஸ்தூலம்  மட்டுமே ,யாம் செய்யும் செயல்கள் எல்லாம் என்னாலேயே செய்யப்பட்டன ,என்னாலே இவ்வளவு பொருட்கள் ஈட்டப்பட்டன ,என்னாலே இவ்வளவு அறிவு பெறப்பட்டது என்று அகந்தை மு