Posts

Showing posts from November, 2017

ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ...!!!

Image
பிரபஞ்ச நாயகனே ..!! விஸ்வேஸ்வரனே ..!!! விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும் வெட்டவெளியோனே..!!! காரிருளே !!! கரும்கும்மிருட்டே ..!!! யாவற்றையும் சூழ்ந்து சூழ்ந்து ஈர்க்கும் ஈர்ப்பு விசைக்கு மூலமான ஆதியே ..!!! அங்கிங்கெனாதபடி எங்கும், எங்கெங்கும் வியாபித்திருக்கும், ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!! எப்படி நின் தன்மை உரைப்போம்..எம்பெருமானே ..!! யாவற்றுள்ளும் பிண்ணி பிணைந்து ஊடுறுவி ,யாவற்றுக்கும் அருள் ஆட்சி நடத்தும் அண்டபேரண்ட நாயகனே ..!!!மனம் போன போக்கில் திரிந்து ,கண்களை மூடிக்கொண்டு இவை எல்லாம் நீ கவனிக்க போகிறாயா ? என்று தெரிந்தும் தெரியாமலும் செய்யும் செயல்கள் யாவற்றுக்கும் மூல காரணமான இருந்துகொண்டு ,இம்மிகூட பிசகாமல் ,பலன்களை வாரிவழங்கும் எம் நாயகனே ..!!! எம் பெருமானே ..!!! பேரொளியே ..!!! உள்ளும் புறமும் நீ ..!! எம் உணர்வும் நீ !! உடலும் நீ ..!!! உள்ஒளியும் நீ ..!!நீயே அனைத்தையும் ஆள்கிறாய் ..!! எதுவும் நினது ஆட்சிபுலத்தை விட்டு விலகுவதில்லை.நின்னை அறிந்திடல் கடினம் ,நின்னை அன்பெனும் தன்மையால்  உணர்ந்திடல் எளிது.அன்பாய் எளிதாய் ஆத்மரூபமாய் இருக்கிறாய்.நுணுகி நுணுகி