Posts

Showing posts from August, 2016

வானோர் பிரான் ...!!!

Image
 இறை எனும் ஞானம், இறை எனும் வேதம் ,இறை எனும் வெளி ,இறை எனும் வெட்டவெளி,இறை எனும் தூய ஜோதி, அண்டத்துள்ளும் ,இந்த பிண்டத்துள்ளும்,நீக்கமற நிறைவாக நிறைந்த இத்தத்துவத்தை எவனொருவன்  தம்முள் உணர்கிறானோ ,அவனே நிறைவுபெற்ற மனிதாகிறான்.அவனுக்கு இறப்பும் என்பதில்லை.மீண்டும் பிறப்பும் என்பதுமில்லை. நீரும் நெருப்பும் ,காற்றும் விண்ணும் ,மண்ணும் ,இந்த பிரபஞ்சமும்  தம் இயற்கை ரகசியங்களை எல்லாம்,  அவனுக்கு அவை தாமே முன்வந்து உணர்த்துகிறது.அஷ்டமா சித்திகளை எல்லாம் வாரி வழங்குகிறது. எவ்வளவு  அழகும் மிளிர்வும்  வளமைகுன்றா செழுமையும் நிறைந்தது  இறைநிலையால் படைக்கப்பட்ட இந்த உலகம்.    எதை தேடுகிறோமோ  அதை அவ்வழியே மிக அழகாக வாரிவழங்கிக்கொண்டேயிருக்கிறது.அள்ள அள்ள குறையாத ஜீவ  அமிர்த  அலைகளை  தந்துகொண்டேயிருக்கிறது.இறைநிலை அது ஒன்றை தவிர இங்கே இந்த பூவுலகில்,தேடுவதற்கு வேறு எதுவுமில்லையடா என சொல்லாமல் சொல்லிக்கொண்டேயிருக்கிறது.இறையை  உணர  இடமோ மொழியோ,பணமோ,அந்தஸ்தோ, எதுவுமே தேவையில்லை என்கிறது.எம்மை நோக்கி எமது மாபெரும் பிரமாண்ட இந்த சிருஷ்டியில்,ஒரு துளி அன்போடு எம்மை பற்றி, எம் தன்மைபற்றி அறிய முற