Posts

Showing posts from April, 2019

இறை ஆசிகள் ...!!!

Image
சர்வேஸ்வரனே .....!!! மானுடம் அறிய இயலா அதிநுட்பதிறம் படைத்தோனே ..!!!நீ தானே என்னுள்   ....உன்னுள்ளும் நான் இருக்கிறேனே .. இந்த உண்மை அறிந்தும் மறந்து விடுகிறேனே பலமுறை .. பாசம் நிறைந்த பரந்தவெளி பெரியோனே ..!!எம் பெருமானே !!  அண்டசராசர உயிர்கள் யாவற்றையும் அரவணைக்கும் ஆதி முதல்வோனே ..!!! தூயோனே !! மாசற்றவனே ..!! மிகபெருமைகொண்ட பழைமைவாய்ந்தவனே ..!! இன்று கிடைக்கும் தொழில்நுட்பதிறமெல்லாம் உன்னுள்ளே எத்தனையோ கோடி கோடி ஆண்டுகளுக்கு முன் ,நின் அதி நுட்ப திறத்தால் ஒரு சிறு புள்ளியாக அலையாக பதிந்துவைத்திருக்கும் அதி உன்னத திறமை வாய்ந்தவனே ..!! பழைமைக்கும் பழைமையானவனே !! புதுமைக்கும் புதுமையானவனே ..!! நின் பெருமையினை அளவிடல் அரிது.நின் பெருமை எண்ணி எண்ணி நெஞ்சம் நெக்குருகி விழிபிதிங்கி நின்றோம் பல முறை .நின்னை நினைத்தல் என்பதே ஒரு சுகம்.ஆழ்ந்து ஆழ்ந்து ,அகன்று அகன்று, விரிந்து விரிந்து, பரந்து பரந்து, இயங்கும் நின் அற்புத திருத்தாண்டவம் எங்கனம் உரைப்பது எம்பெருமானே ..!!!.கிடைத்தற்கரிய  இந்த மானுட பிறவியில் நின் பெருமை எண்ணி எண்ணி ,நீ எம்மை படைத்த விதம் எண்ணி எண்ணி ,மகிழ்ந்து மகிழ்ந்து,ஆ