Posts

Showing posts from April, 2020

ஸ்ரீ லலிதை

Image
ஆடாது அசையாது ஆழ்ந்து உள்நோக்கி பரந்து விரிந்த ஸ்ருஷ்டியில் தாம் படைத்த உயிர்களின் ஒவ்வொன்றையும் சூழ்ந்து ,அரவணைத்து ,ஒவ்வொரு அணுவிலும் ஊடுருவி அருள் ஆட்சி செய்யும் ஆயிரம்  கோடி சூரியனை போன்ற கண் கூசும் பிரகாச  சுடரொளி கொண்ட  கருணை தாயே  !!  கருணா ஸாகரமே !!  அன்பால் இளகிய நெஞ்சம் கொண்டு ஈசனையே ஈர்த்த மாபெரும் பேரழகியே ..!!அன்னம் போன்ற நடை கொண்டவளே !! அமுதம் போன்ற சொற்கள் அருள்பவளே !!  அன்னபூரணியே  ..!!  அகிலாண்டகோடி ஈஸ்வரியே !! காரிருள் நாயகனின் நெஞ்சம் ஈர்த்தவளே !!  செக்கச்சிவந்த செந்நிறம் கொண்டவளே !!  எழிலே !! நாயகியே !!துடிப்பும் துள்ளலும் கொண்ட ஈர்ப்பு நிறைந்தவளே !!   அழகே !!  ஆருயிரே !! தாய்மை நிறைந்தவளே !!   எழில் நாயகியே !! எம் நெஞ்சமெல்லாம் நின்னை நினைந்து நினைந்து ,ஏங்கி ஏங்கி ,கண்ணீர் மல்கி மல்கி ,விம்மி விம்மி , பூரித்து புளங்காகிதமடைந்து,அன்பால் கசிந்து உள்ளம் நெக்குருகி,நின் கருணை மழையில் நனைகிறது .என்றும் நின் ஜீவ அருள் ஆசி தொடர  நின்னை அழைக்கின்றோம்  தாயே ..!! வருக !! வருக !! ஞான ஒளியே  வருக !! நான் மறையே வருக !! திருமகளே   வருக   !! திரிசூலியே வருக !! மாபெருந்