Posts

Showing posts from November, 2020

உள்ளம் உருகுவதற்கே !!

Image
எங்கும்  நிறைந்து  எம்முள்  மறைந்து  எல்லாம்  ஆன  எம்பெருமானே !! எம் நாயகனே   !!பிறப்பும்  இறப்பும்  இடையே  மாய  வலை விரித்து மதி மயக்கவைத்து ஏதேதோ  செய்யவைத்து,  அடித்து , துவைத்து , பிழிந்து, கசக்கி இறுகவைத்து,  உறையவைத்து  கூடவே   உள்ளத்தையும்  உருகவைத்து சொல்லஇயலா  விந்தைபுரியும்  சுடரொளி  நாயகனே ..!!! எம் அப்பனே  ..!! சர்வேஸ்வரனே  !! எம் பெம்மானே   !! விண்ணோர்  தொழும்  வேந்தனே  !! பிறப்பை  அறுக்கும்  பெருமானே  !! தூய  ஒளி  சூழ்ந்த  ஜோதியாய்  ஜொலிக்கும்  பேரின்ப  ஊற்றே  !! வருவாயா  எம்முள்ளும்  ? நினை எண்ணியே  இந்த ஸ்தூல  உடல் நாள்தோறும்  அதன் ஆயுள்  நோக்கி  நகர்ந்துகொண்டிருக்கின்றது .எத்தனை  எத்தனை  மகான்கள்  நீ படைத்த  இந்த புண்ணிய பூமியிலே ,அத்தனை  மகான்களும்  ,நின்னை  எண்ணி  எண்ணி  தம் சிந்தை  முழுவதும் மெய்சிலிர்த்து ,அனுபவித்து   ஆனந்தம்  நிரப்பி   எழுதிய  பாடல்கள்  ஆயிரம் ஆயிரம்  !!பேரன்பு  அலை கொண்டே  நின்னை  எம்மால்  துதிக்க  இயலும் ,இந்த அன்பு  அலை ஏற்று  வருவாய்  பெருமானே  ..!!  நின்  பொற்பாதம்  பணிகின்றோம்..!!   எம் பணிவான  வேண்டுகோள் செவிமடுத்து வந்தமர்வாய்  எம் சிந்தை