Posts

Showing posts from December, 2013

தென்பொதிகை கைலாயம்

Image
அன்புள்ள   அகத்திய  நெஞ்சங்களை  ஒரு சிறிய  இடைவெளிக்கு  பின்  மீண்டும் சந்திப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன் .கால சக்கரம்  சுழல சுழல மாற்றம்  ஒன்றன் பின்  ஒன்றாக அரங்கேறுகிறது .எத்தனை தலைமுறை  கர்ம வினைப்பதிவுகள்  அச்சு பிறழாமல் மிக  அழகாக செயல்படும்  விந்தை .செய்த புண்ணியம்  பாவம்  அனைத்தும் சூட்சும  செல்களில்  பதிந்து அதனதன் விளைவுகளை நடத்திக்காட்டும்  அற்புதம் .எப்படி  வாழ்க்கை  இப்படி  உள்ளது ,ஏன்  இந்த உடல்,மனம்  அழுத்தம்  தரும் பதிவுகள் ? யார் இதனை தீர்மானிப்பது?கடந்த கால பதிவுகளுக்கு  யான்  என்ன  செய்ய முடியும் ? எம்  எண்ணம் அறிவு  இவை  மீறியும் வந்து  ஆட்டிப் படைப்பது  ஏன்  ? அத்தனையையும் அனுபவிக்க  வேண்டியது  தான் .இறைவனின்  ஆணை !இம்மி  பிறழாமல்  நீதி வழங்கும்  ஈசனின்  உத்தரவு !இனி  வரும்  காலங்களில் அமைதி உருவாக்குவோம் ! மனம்  விரும்பி இறை அலைகளை ஏற்றுக்கொள்வோம் .இருக்கும் பதிவுகள் தாக்கம்  குறைய எம்  தந்தையின்  திருவடி பணிவோம் !இளைப்பாற  நிழல்  தரும்  எம் தந்தையின் கருணை  அலைகள்  ,எப்பதிவையும்  அதன்  மூல  வேரையும் உள்நோக்கி ஆராய்ந்து  அதன்  தாக்கத்தை  குறைக்கும் சக்தி மிக்க  அ