Posts

Showing posts from August, 2015

ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் - இலுப்பைக்குடி

Image
பைரவசக்தி என்பது காலம் காலமாய் தொடர்ந்து இம்மண்ணுலகில் வாழும் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது.இந்த சக்தியின் வேகம் ,இதன் மயிர்கூச்செறியும் ஆற்றல்,அதனால் உடலில்,உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் பிரமிக்கவைக்கிறது.எவர் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி நொடிப்பொழுதில் தம் தன்மையை காண்பிக்கும் இதன் வல்லமை ,நினைக்கவே பிரம்மாண்டமாய் உள்ளது.பைரவரை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக  பைரவர் தரும் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.இது யாம் எமது அனுபவத்தில் கண்டஉண்மை.பைரவரின் சக்தியை உணர்ந்தே ஆவர்கள்.பைரவரின் அருள் ஆசிஇருந்தால் மட்டுமே மூலிகை பற்றிய ரகசியங்கள் புரியும்.இல்லை எனில் ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல ஆகிவிடுகிறது.அதுமட்டுமல்ல பொருள் வளத்திற்கும் பைரவசக்தி மிக சிறந்தமுறையில் உதவுகிறது. வாழ்வின் தேவைகள் நிறைவேற்றிக்கொள்ள ஸ்வர்ணம் மிக அவசியமாகிறது. ஸ்வர்ணம் இல்லாமல் அதுவும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது மிக கடினமாகிறது.கடின உழைப்பின் மூலம் இதனை பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது .எல்லாம் கர்மவினையும் கோள்கள் ஆட்சிபுலமும் மிக முக்கியபங்கு வகிக்கிறது.இருந்தாலும் இவை எளிதில் பெற