Posts

Showing posts from 2012

ஸ்ரீ கோரக்கர் தரிசனம்

Image
சித்தர்களும் முனிவர்களும்  போற்றி வழிபட்ட தெய்வம் .சித்தர்கள் வேண்டியபடி,வேண்டிய அனைத்து  வரங்களையும் தந்து அருளியவள் இந்த தாய் . ஒவ்வொரு மனித உயிர் உள்ளும் நிறைந்திருப்பவள்.ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல , எக்காலத்தில் ,என்ன வேண்டுமோ அதை அறிந்து அருள் செய்பவள். அன்பும்  கருணையும் நிறைந்த குழந்தை வடிவான தாய்  ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி பாதம்  போற்றி இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன் சதுரகிரி பயணம் ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு அனுபவம் . சட்டை இன்றி வெறும் வேட்டியுடன் மட்டுமே என்  பயணம்.அப்பொழுது தான்,இந்த மூலிகை காற்று நன்கு உடல் மீது விழும். உலக வாழ்விலே ஈடுபட்டு, பல்வேறு நச்சு வாயுக்களே என் உடலில் மிச்சம்.மலை ஏற,ஏற, இவை எல்லாம் அழுத்தி,நன்கு  கசக்கி பிழியப்பட்டு ,நச்சு வாயுவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது.எவ்வளவு அருமையான காற்று ..!  பயணம் செய்தால் மட்டுமே உணரமுடியும். என் குருநாதர் சொல்லுவார் "வருஷம் 365 நாளும் வேலை வேலை என்று கிழிச்சது போதும்,ஒரு நாள் எல்லாத்தையும் மூடிவைத்துவிட்டு,இயற்கையை இறைவனை ரசித்துப்பார், உணர்ந்துபார் "என்பார் .சத்தியமான