Posts

Showing posts from February, 2017

ஸ்ரீ லலிதாம்பிகை பாதம் போற்றி !!!

Image
வில் எனும் புருவங்களும் வேல்விழி கண்களும்,கொவ்வை செவ்விதழ்களும்,கொன்றைவார் சடைமேல் குளுமைநிறை  மதியும் ,அமுதெனும் தேன்மழை மொழியால் அகிலத்தையே ஈர்த்தவளும்,அழகே யாவும் சேர்ந்து அழகுபார்க்கும் நின் எழில் அழகும்,அதி நுண்பார்வையும்,ஆழ்ந்து அடர்ந்து நீண்டு எங்கும் எங்கெங்குமாய் தமது அன்பெனும் கருணை அலைகளை பரப்பி ,அன்பால் அனைத்தையும் வாரி அரவணைத்து,காத்து ,எதுவும் எம்மை விட்டுவிலகுவதில்லை,எல்லாம் எமது ஆட்சிபுலத்தில் என அருளாட்சி செய்யும் ,திரிபுவன நாயகியே,சக்தி ஸ்வரூபிணியே,சாந்த ஸ்வரூபிணியே சகல கலைகளுக்கும் அதிபதியே,சர்வேஸ்வரரின் நாயகியே,ஆயிரம் நாமங்களுக்கு சொந்தக்காரியே ,ஸ்ரீ லலிதாம்பிகையே ! நின் பொற்பாதம் பட்ட மண்ணின் திருவடிதடத்தைகூட தரிசிக்க அருகதை அற்றவனாகிய இருக்கும் எம்மை ,நின் பார்வைபடும் கோடானகோடி தூசிகளின் ஒரு சிறு தூசிக்கும் கீழ் உள்ள அடியேனின்,எம் நிலை கண்டு இறங்கிவந்து,அருள்ஆசி அலைகள் வழங்குங்கள் அன்னையே !!நின் திருவருள் என்றும் எம்முள் இருக்க வழிவகை செய்யுங்கள் மஹாதேவியே!!கருணைகடலே !! கருணைத்தாயே !!!  சரணாகதி !! சரணாகதி !!!சரணாகதி !!! சக்தியும் சிவமும்எங்கும் நிறை