Posts

Showing posts from November, 2016

அருணாசல சிவ..!!!

Image
உள்ளம் என்பது உருகி உருகி , மெதுவாய் கனிந்து , கனிந்து , அன்பால் கசிந்து , கசிந்து , இறைஅலைகளை உணர்வதற்கே.இதில் எவ்விதமேனும் இறை தவிர்த்த மற்ற அலைகள்   இங்கே   இருக்க , உள்ள தூய்மை மற்றும் அதன் தன்மை மாசுபடுகிறது.அது எதற்காக படைக்கப்பட்டதோ அதன் நோக்கம்   தடைபட்டு , அழுக்கும் , மனகுப்பையும் சூழ்ந்துகொள்கிறது.இப்படி காலம் காலமாக மாசுபட்ட உள்ளத்தால் , இப்படியே   இருக்க பழகிகொண்டதால் இறைஅலைகள் உணரும் தன்மை என்பது இங்கே கேள்விக் குறியாகிவிடுகிறது.மாறாக கூச்சலும் குழப்பமும் மிகுந்து ஒரு நொடி பொழுதுகூட   நிம்மதியின்றி இருக்க வைக்கிறது.மகான்களையும்   , சித்தர்களையும் அவர் தம்   அருள் அலைகளை உணரும் தன்மையும் சுத்தமாக இழந்துவிடுகிறது.நாள் தோறும் இங்கே உள்ளத்தில் தூய்மை என்பது   மிக அவசியமாகிறது.ஒரு நாளில் ஒரு நொடி பொழுதேனும் எவ்வித வாழ்வியல் அழுக்கின்றி , இறைஅலைகளை உணரும் தன்மை உருவாக்கிகொண்டால் , அந்த நாளில் அந்த நொடி தந்த அலைகளே ஒரு தெளிவினை தந்து , அன்றைய நாளை எதிர்கொள்ள தேவையான   தைரியத்தையும் ஆற்றலையும் தந்துவிடுகிறது.அமைதியாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி , எதுவும் அற்