Posts

Showing posts from January, 2013

நெஞ்சம் ஈர்த்த வேம்பு

Image
கர்ம வினையின் செயல்பாடுகள் ,கால மாற்றத்திற்கேற்ப,கோள்கள் இடமாற, அதனதன் பூர்வ ஜென்ம புண்ணியங்களை,பாவங்களை எங்கெங்கு எவ்வாறு செயல் படுத்தமுடியுமோ அதனை  அவ்வாறே அச்சு பிறழாமல்  செயல் படுத்திவிடுகிறது.கர்ம பதிவிற்கேற்ப பலன்களை கொடுத்தே செல்கிறது.எதையும் விட்டுவைப்பதில்லை.புண்ணியங்களால் மனம் மகிழ்ச்சியடைகிறது .பாவங்களால் மனம் வேதனை அடைகிறது . இரண்டையும் சமமாக ஏற்றுகொள்பவன் ஞானி.மற்றவர்க்கு வேதனையிலிருந்து மீண்டுவெளிவர இங்கே ஒரு உதவி  தேவைப்படுகிறது.தெய்வீக அலைகள் ,மகான்களின் அருள் அலைகள் கர்மவினைகளுக்கு ஒரு விதிவிலக்கு .இந்த அருள் அலைகள்  எந்த அளவுக்கு செறிவு  உள்ளதோ   அதற்கு தக்கவாறு வினைபதிவுகளின் தாக்கத்தை  சற்று குறைவாக்கி மனதிற்கு ஒரு நிம்மதியையும் ஒரு மகிழ்ச்சியையும் அளிக்கிறது .  தந்தையின் தெய்வீக அருள் தரிசனம் பெரும் முன் ,ஏனென்றால் இப்போது தந்தையின் அருள் அலையின் அரவணைப்பில் உள்ளேன். ஆதலால் எண்ணும் எண்ணமும் செய்யும் செயலும் தந்தையின் ஆட்சிபுலத்தில்.அகத்தியத்திற்கு முன் , பல ஆண்டுகளுக்கு முன் ,ஒரு நாள் ஒரு மிகபெரிய குழப்பம் என்  மனதில் ,எங்கு சென்றாலும் ஒரு  குழம்பிய தேவை இல்ல