Posts

Showing posts from 2014

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.!!

Image
அன்பின் வழி வந்தவர்கள்,அன்போடு இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், இவர்கள் அருகில் இருந்தாலோ அல்லது அவர்கள் அருகில் நாம் சென்றாலோ அந்த கருணை அலைகள் நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.எங்கெங்கும் ஒரு வித அமைதி அலைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும்.அன்பு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை இல்லாமல் செல்லும் போது இறைநிலை ஆகிறது.எல்லை இல்லா அன்பு இறைநிலை.அன்பில்  மட்டுமே அனைத்தும் தம் நிலை இழந்து கரைந்துவிடுகிறது.இருக்கும் இடம் தெரியாது  போய்விடுகிறது.எங்கெல்லாம் அன்பின் அலை தவழ்கிறதோ அங்கெல்லாம், இறை நிலை உள்ளது. தந்தை ஸ்ரீ அகத்திய மகான்   " அன்பு  என்றால் என்ன  ?  அதன் ஆழம் என்ன ..? "  என்று  எமக்கு சூட்சுமமாக உணர்த்திய பிறகே, ஒரு அலைகளின் அன்பு பசை எம்முள், எம் சூட்சும தேகத்தில் திணித்த பிறகே பல் வேறு மாற்றங்களை உணர்ந்தோம்.அன்பின் ஆற்றல் கண்டு வியந்தோம் பல முறை.(( இது அன்பின் ஆழம்.... கட்டுரை வாசிக்கவும் )அன்பெனும் அதிர்வு குறைந்த மன நிலையில் இருக்க, பார்க்கும் எதுவும், கேட்கும் எதுவும், நடக்கும் நிகழ்வு எதுவும், ஒரு சுகமான ஆனந்தமே.! எமது வாழ்வில்  அன்புநிறைந்த பல்வேறு ஆத்மா

செல்வவளம் அருளும் திருமகள் போற்றி !

Image
நீண்ட இடைவெளிக்குபிறகு  அகத்திய உள்ளங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.அப்பப்பா....!காலம் சுழன்று கொண்டே பல்வேறு மாற்றங்களை உருவாக்கி கொண்டு  ஓடிக்கொண்டேயிருக்கிறது.எமது ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே பிரமிக்க வைக்கும் மாற்றங்கள்.இறை உணர்வோடு செயல்களை செய்தாலும் சரி,இல்லை  வேறு வழியில் சிற்றறிவிற்கு எட்டிய வரை செயல்கள் செய்தாலும்,அனைத்தும்,தக்க விளைவுகளை கொடுத்துக்கொண்டே, காலம்  தம் பயணத்தினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்கியவருக்கும்,முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கியவருக்கும் கர்மவினை என்ற ஒன்று ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனதன் பதிவிர்கேற்ப.என்ன செய்தோம் இந்த உயிர் அறிவை உணர ?எவ்வாறு  இங்கே கொட்டிகிடக்கும் சூட்சும அலைகளை உணர, நமக்கு கிடைத்த இக்காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டோம்? எந்த அளவுக்கு இறைநிலையிலேயே இருக்க பழகிக்கொண்டோம் ? என்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் எம்மையும் சேர்த்து. இறைஅலைகளோடு இல்லாத எமது நாட்கள் எல்லாம், பிச்சை எடுப்பதற்கு சமமாக இருந்திருக்கின்றது  என்பதை பல முறை உணர்ந்திருக்கின்றேன்.விட்ட