Posts

Showing posts from 2015

தென்கைலாயம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷி -ஜெயந்தி விழா -2015

Image
அகத்திய உள்ளங்களே ஸ்ரீ அகஸ்திய மகரிஷி அய்யா அவர்களின் ஜெயந்தி விழா இந்த வருடம் 29.12.2015 செவ்வாய்கிழமை அன்று திண்டுக்கல் அருகே உள்ளே சிறுமலை ஸ்ரீ அகஸ்தியர் கோவிலில்  கோ பூஜையுடன் 1008 அஷ்ட அதிக சஹஸ்ர  கும்ப கலசாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது .பல்வேறு மூலிகை யாகமும் ஐயாவுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.அதன் ஒரு சில தொகுப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்.(Exclusive to Agathieyam Viewers). மலை மிக அழகாக  தோற்றத்தில் கைலாயம் போல  சிவன் வாழும் மலையாக காட்சியளிக்கிறது.மலை உச்சியில் எங்கும் நல்ல அதிர்வு ஆற்றல் உணரமுடிகிறது.தூயவெண்பனி போன்ற மின்னிடும் நுண் ஆற்றல்மிக்க இறை அலைதுகள்கள் மலையெங்கும் வியாபித்துள்ளது.இங்கு வந்து தவம் செய்யவேண்டிய அவசியமில்லை.சற்றே  அதன் ஆற்றல் அலையை உள்வாங்கி  அப்படியே அனுபவிக்க ஒரு இனம் புரியாத பாச அலைகள் நம்மை சூழ்ந்துகொள்கிறது,அதனை அவ்வாறே பிடித்து மேலும் தொடர நேரம் செல்வதே தெரியாமல் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.நகர வாழ்வில் தம்மை இணைத்துகொண்ட அன்பர்கள் ஒரு முறையாவது இங்கு வந்து, இது போன்ற சூழலில் உலாவும் மூலிகை காற்றையும்,இங்கே கொட்டிகுவிக்கவைக்கப்பட்டுள்ள

பிரார்த்தனை - ஒரு வேண்டுகோள் !

அகத்திய உள்ளங்களே !! மிகப்பெரும் மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரமும் மிக கடினமாக பாதிக்கப்பட்டது என்பது தாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.இன்னும் சில பகுதிகள் வெள்ள நீர் வடியாமல் தொழில்துறைகள் ,அதில் வேலைபார்க்கும் அன்பர்கள் ,தங்கள் உடைமைகள்,உறைவிடங்கள், யாவும் இழந்து,மிகுந்த பாதிப்புக்குஉள்ளாகி,கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறார்கள்.அகத்திய உள்ளங்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை எவ்விதமேனும் பொருளோ,உடையோ அல்லது ஏதேனும் ஒரு வகையில்  உதவி செய்யுங்கள் என  உள்ளன்போடு வேண்டுகோள் வைக்கிறோம்.அகத்திய உள்ளங்கள் அனைவரும் எங்கெங்கு இருந்தாலும் மனதால் ஆழ்ந்து அய்யாவை வணங்கி ,பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும்  உள்ளத்தால் நெஞ்சம் நிறைந்து வாழ்த்தி ,அவர்கள் இயல்பு வாழ்கை விரைவில் மீண்டெழுந்து மக்கள் யாவரும் சுபிட்சமாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்யவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஆதவனின் காந்த அலைக்கதிர்களும்,,சனிகிரகத்தின் காந்த அலைக்கதிர்களும் ,பாதிக்கபட்ட  சென்னைக்கும்,மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்குமாறும்,துயரத்தால் வாடும் மக்களுக்கு, அசைக்க ம

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி

Image
உள்ளம்  இறைவன் வாழும் ஆலயம்.சிவன் வாழும் ஆலயம். எதுவும் இங்கே சாத்தியம்.அனைவரையும் வாழ்த்தவும் முடியும் இல்லை வேறொரு வழியில் சபிக்கவும் முடியும்.அந்த அளவுக்கு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டது.கர்மவினை அதன் தன்மைக்கேற்ப ஆட்டிபடைக்கும் கோள்கள் ,அதன் காரணமாக வேலைபளு,அதனால்  நாட்போக்கில் உண்டான  மனகசப்பு,ஒரு இறுக்கம் ,இவை யாவும் உள்ளத்தை இறைவன் வாழும் ஆலயத்தை கலங்கப்படுத்திவிடுகிறது.இந்த கலங்கத்தை சரிபடுத்த தூய்மை இங்கே அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் சிவதொண்டில் ஈடுபடுவது,சிவதரிசனம் காண்பது, தவம் செய்து இறைவன் ஆசிகளை பெறுவது, ஜீவ சமாதி சென்று சித்தர் ஆசிகளை பெறுவது,அன்பால் உள்ளம் உருகி ஆழ்ந்து அனைவரையும் வாழ்த்துவது என நிறையவழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் இறைநிலையை உணர்தல் அவசியமாகிறது. இல்லை எனில் ஆன்மீக வாழ்வில் இருந்துகொண்டு இந்த பொருள் தேடும் வாழ்கை வாழ்வது என்பது கடினமாகிவிடுகிறது. வாருங்கள் கன்னிவாடி எனும் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கு செல்வோம்.இங்கே செல்வதற்கு நிறைய வழி  இருக்கிறது.ஓட்டன்சத்திரத்திலிருந்தும்,திண்டுக்கல்லிருந்தும் வரலாம்.யாம் சென்ற

ஒம் நம சிவாய !!!

Image
  மனிதனின் மனோ நிலை எந்த அளவுக்கு பக்குவம் அடைகிறதோ,எந்த அளவுக்கு ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை  பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம்  என்பதை மனிதன் புரிந்துகொள்ளவேண்டும்   என்பது தந்தையின் வேதவாக்கு .பலகீனமான மனம் எதற்கும் ஒத்துவராது.அதை வைத்துகொண்டு எதையும் சாதிக்க இயலாது.ஆக மனம் வலுப்பெறவேண்டும்,மனதின் ஆற்றல் நன்கு தெரிந்து உணரவேண்டும்.எது வரினும் அதனை முதலில் எதிர்கொள்ளுதல், தாங்குதல் இந்த மனம்.இது ஒரு நிலையில் இல்லை எனில் எதையும் எதிர்கொள்ளல் இயலாது. இந்த' மனம் நமது உடலில் உண்டான ஜீவகாந்த ஆற்றலின் அடுத்த நிலை அடுத்த கட்டம்.இவை செலவாகிகொண்டேயிருக்கும் ,அவ்வாறு இது வரை பழக்கப்டுத்திக்கொண்டுவிட்டோம்.அது வந்தவழி திரும்பி உள்நோக்கி பார்க்க அமைதிபெற்று ஆற்றல் தம்முள் சேர்த்துக்கொள்கிறது. எந்த ஒன்று கிடைத்தால் அல்லது அதை உணர்ந்தால் இந்த மனம்  அது நிம்மதி பெரும்,அமைதி பெரும்,இன்றைய காலகட்டங்களுக்கு தகுந்தார் போல நமது வாழ்வியல் நிகழ்வுகள் சீராக இயங்க  ஒத்துழைப்பும் ,யாருமே தர இயலாத ஒரு தீர்வும் தரும்? பிரம்மத்தில் ம

சிவமும் சிவயோகியும் .!!

Image
இந்த உலகத்தில்  எழுதிவைக்கப்பட்ட வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று நாம் கண்ணால் காணும் காலம் வரை  எத்தனை ,எத்தனை, சிவயோகிகள் ...!! ஒம் நமசிவாய எனும் தாரகமந்திரம் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு  சிவத்துள் தம்மை மறந்த எத்தனை எத்தனை  ஆயிரமாயிரம் மகான்கள் ..!!!  அவர் தம் ஜீவசமாதிகள்..!!,இவை தமக்குபிறகும் தொடரவேண்டும் ,சிவமே இறைநிலை ,இறைநிலையே சிவம், என மக்கள் சிவத்தை உணரவழிவகை செய்ய, இவர்கள் சூட்சுமாய் அரூபமாய் இன்றும் ....இன்றும்....இப்பொழுதும் .... இந்த காலகட்டத்திலும்  அன்புள்ளம் கொண்ட ஆத்மாக்களுக்கு வழிநடத்தும், சிவலயத்தில் ஈடுபடுத்தும் ,இவர்கள் கட்டிவைத்த ,எத்தனை எத்தனை  பெருமைமிகு சிவஆலயங்கள்  !!.இம்மண்ணில் பிறப்பெடுத்ததற்கே பெருமை அல்லவா கொள்ளவேண்டும் ..!! அதுவும் புண்ணியவான்கள் அருள்சூழ்ந்த இடத்தில் வசிப்பது,சுவாசிப்பது, இருப்பது ,நடப்பது,என அனைத்தும் ஒரு சுகமான அனுபவமே...அதுவும் அவர்கள் அரவணைப்பில் வாழ்வது இறை அருகே நம்மை தாமாகவே அழைத்துசென்றுவிடும் !! இன்றும் நம்மால் உணரஇயலாத ,சிவலயத்தில் இருக்கும் மகான்கள், இன்றும்.... என்றும்... இவர்கள் யாவரும் சிவத்துள் மூழ்கும் காரணம் த

ஸ்ரீ ஸ்வர்ணஆகர்ஷன பைரவர் - இலுப்பைக்குடி

Image
பைரவசக்தி என்பது காலம் காலமாய் தொடர்ந்து இம்மண்ணுலகில் வாழும் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது.இந்த சக்தியின் வேகம் ,இதன் மயிர்கூச்செறியும் ஆற்றல்,அதனால் உடலில்,உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் பிரமிக்கவைக்கிறது.எவர் தம்மை அழைத்தாலும் பாரபட்சமின்றி நொடிப்பொழுதில் தம் தன்மையை காண்பிக்கும் இதன் வல்லமை ,நினைக்கவே பிரம்மாண்டமாய் உள்ளது.பைரவரை வழிபாடு செய்பவர்கள் கண்டிப்பாக  பைரவர் தரும் பலன்களை அனுபவித்தே ஆகவேண்டும்.இது யாம் எமது அனுபவத்தில் கண்டஉண்மை.பைரவரின் சக்தியை உணர்ந்தே ஆவர்கள்.பைரவரின் அருள் ஆசிஇருந்தால் மட்டுமே மூலிகை பற்றிய ரகசியங்கள் புரியும்.இல்லை எனில் ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல ஆகிவிடுகிறது.அதுமட்டுமல்ல பொருள் வளத்திற்கும் பைரவசக்தி மிக சிறந்தமுறையில் உதவுகிறது. வாழ்வின் தேவைகள் நிறைவேற்றிக்கொள்ள ஸ்வர்ணம் மிக அவசியமாகிறது. ஸ்வர்ணம் இல்லாமல் அதுவும் இன்றைய காலகட்டத்தில் வாழ்வது மிக கடினமாகிறது.கடின உழைப்பின் மூலம் இதனை பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது .எல்லாம் கர்மவினையும் கோள்கள் ஆட்சிபுலமும் மிக முக்கியபங்கு வகிக்கிறது.இருந்தாலும் இவை எளிதில் பெற

ஸ்ரீ பைரவம்...!!!

Image
காலம் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு முடிவற்ற நிகழ்வு.ஆயிரமாயிரம் யுகங்களாய் இந்த காலம் சுழன்று கொண்டேஇருக்கிறது,இன்னும் சுழன்றுகொண்டேதான் இருக்கப்போகிறது.ஜனனம் எடுத்தவர் மரணம் ஆகுவதும்,மரணம் எடுத்தவர் மீண்டும் ஜனனம் ஆவதும்  சென்றுகொண்டேஇருக்கிறது.இந்த சுழற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சக்தி இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டு,யுகம் யுகமாய் ,கம்பீரமாய்,பிரம்மாண்டமாய் ,ஒளிப்பிளம்பாய் வலம் வந்துகொண்டிருக்கிறது.அந்த சக்தியின் அதிர்வு மிகமிக அதிகம் .தாம் பார்க்கும் எத்தனை ஆயிரம் உயிர்களுக்கும் நொடிப்பொழுதில் இருக்கும் அலையியக்கத்தை  மாற்றி அமைத்து,இறைவெளிப்பாதையில் உட்செலுத்தி ,பேரொளியினை நிரப்பி,ஜீவமுக்தி அளித்துவிடும் சக்திபெற்றது.அப்படிப்பட்ட ஒரு மாபெரும்  மிக அதீத அதிர்வு உணர்வு கொண்ட சக்தி, ஒருபேராற்றல்,ஒரு கரிய நிறமுள்ள ,கட்டுகடங்காத அலைகளின்ஆற்றல் கொண்டுள்ள சக்திதான் பைரவம் , பைரவர் ,வயிரவர் ,காலபைரவர்  என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இவர் காலத்தையும் வெல்வார்.காலனையும் வெல்வார்.தொடக்கம் முடிவு  ஆகிய எதுவும் அறிய இயலாத  சிவத்திலிருந்து பிறந்து சிவத்தின் ஒரு