Posts

Showing posts from January, 2017

சிவமும் பைரவமும்..!!!

Image
இருக்கும் இடத்திலிருந்து,  இருக்கும் இந்த மனதினை,உள்ளத்தை வைத்துக்கொண்டு, எங்கும் நிறைந்திருக்கும் ஈசனின் அலைகளை ,நாம் இருக்கும் இடம் முழுவதும், நிறைந்து வழிந்தோடசெய்யும் ஒரு அற்புத சக்தியை ,நம்முள் ஏற்படுத்தும் ஒரு நுட்பம்  யாதெனில் பைரவ மந்திரம்,அவை  தொடர்ந்து சொல்வதால் யாவும் வசப்படும் என்பது சத்தியமான உண்மை.சிவத்தின் அலைகள் உணர,அது தரும் மனதிற்கு எதையும் எதிர்கொள்ளத்தேவையான வலிமை,ஒரு அமைதி,ஒரு நிறைவு மற்றும் ஆனந்தம்.எங்கும் நீக்கமற நிறைந்த சர்வேஸ்வரரின் அலைகள் உணர்வது என்பது இன்றைய  வாழ்வியலின் ஒரு தேவை.என்றோ செய்த பாவ,புண்ணியத்தின் சாராம்சமாகிய கர்மவினையும் ,அச்சுபிசகாமல் ஆட்டிபடைக்கும் அதன் தாக்கத்தையும்,இன்று உணரும், இந்த நொடிபொழுது உணரும், சிவ அலைகள்  அதன் தன்மையை நீர்த்துவிடசெய்கிறது என்பதும் உண்மை. அமைதியும் ,நிறைவும்,ஆனந்தமும் வேண்டுமெனில் ,சிவ அலைகளை உணர்வது அவசியமாகிறது.சிவ அலைகளை ஒரு துளி உணர்வதால் ,உணர்பவரின் உள்ளம் கட்டுங்கடங்கா பேராற்றல் பெற்ற நாயகனின் சுடரொளியால் சூழப்படுகிறது.உணர்பவரையும் உணர்பவரின் அருகில் இருப்போரையும்,புல் பூண்டு செடி,கொடி என அனைத