Posts

Showing posts from November, 2014

செல்வவளம் அருளும் திருமகள் போற்றி !

Image
நீண்ட இடைவெளிக்குபிறகு  அகத்திய உள்ளங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.அப்பப்பா....!காலம் சுழன்று கொண்டே பல்வேறு மாற்றங்களை உருவாக்கி கொண்டு  ஓடிக்கொண்டேயிருக்கிறது.எமது ஒரு கட்டுரைக்கும் அடுத்த கட்டுரைக்கும் இடையே பிரமிக்க வைக்கும் மாற்றங்கள்.இறை உணர்வோடு செயல்களை செய்தாலும் சரி,இல்லை  வேறு வழியில் சிற்றறிவிற்கு எட்டிய வரை செயல்கள் செய்தாலும்,அனைத்தும்,தக்க விளைவுகளை கொடுத்துக்கொண்டே, காலம்  தம் பயணத்தினை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.மாதம் மூன்று லட்சம் சம்பளம் வாங்கியவருக்கும்,முப்பது ஆயிரம் சம்பளம் வாங்கியவருக்கும் கர்மவினை என்ற ஒன்று ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கிறது அதனதன் பதிவிர்கேற்ப.என்ன செய்தோம் இந்த உயிர் அறிவை உணர ?எவ்வாறு  இங்கே கொட்டிகிடக்கும் சூட்சும அலைகளை உணர, நமக்கு கிடைத்த இக்காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டோம்? எந்த அளவுக்கு இறைநிலையிலேயே இருக்க பழகிக்கொண்டோம் ? என்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் எம்மையும் சேர்த்து. இறைஅலைகளோடு இல்லாத எமது நாட்கள் எல்லாம், பிச்சை எடுப்பதற்கு சமமாக இருந்திருக்கின்றது  என்பதை பல முறை உணர்ந்திருக்கின்றேன்.விட்ட