Posts

Showing posts from July, 2019

வேல் விழி நங்கையாள் ..!!!

Image
சர்வ மங்கலம் நிறைந்தவளே !! அழகு வெள்ளமே ..!! அழகின் அழகே ..!! ஜுவாலைத் தீபோன்ற கண்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றுபவளே!!   கருணையின் பிறப்பிடமே ...!! தேவியே ..!! ஈசனின் நாயகியே !! நின் பார்வை படுமிடமெல்லாம்  என்றென்றும் சுபிக்ஷம் தருபவளே ..!! சுத்த தங்கம் போன்று ஜொலிக்கும் சொர்ணாம்பிகையே ..!!  தாயன்பு எனும் கருணை அலைகள் கொண்டு ஆயிரம் ஆயிரம் கோடி ஜீவராசிகளையும் இயக்கி , காத்து ,அரவணைத்து ,யாவற்றிகும் அமுதுபடைக்கும்  சர்வ வல்லமை பெற்றவளே !! நின் அருள் அலைகள் ஒளி வீசட்டும் என்றென்றும் !! வில்லினை போன்ற புருவங்களை உடையவளே !! வேல் விழியை போன்ற கண்களை உடையவளே !! மஹா மஹா சக்தி நிறைந்தவளே !! அழகிய புல்லாக்கும் மூக்குத்தியும் அணிந்தவளே !! கருணா ஸாகரமே !!நின் பெருமையும் புகழும்   புராணங்கள் கூறுகிறது அவை யாவும் அளவிடற்கரியது !! நின் பாசம் நிறைந்த அருள் ஒளி பார்வையே கோடான கோடி ஜீவன்களை ஈர்க்கிறது !! ஈர்த்து அமுதமேனும் பாசமழையால்  திக்குமுக்காடசெய்கிறது !! ஜொலிக்கும் பொன்னொளி நிரம்பிய தேகமும் ,நின் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் ,தாயன்பு நிறைந்த கருணையும் ,அழகிய புன்னகையும் யாவற்றிற்கும் அருள