Posts

Showing posts from June, 2019

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க..!!!

Image
சிவத்தை தவிர வேறு ஒருவர் இல்லை .சிவத்தை விட வேறு ஒரு வழியும் இல்லை .சிவமே கதி .சிவமே சரியான தீர்வு சொல்லும் ,சிவமே யாவற்றையும் தம்முள்ளே உள்ளடக்கி இருக்கிறது.சிவம் தரும் சோதனையை அனுபவித்து தான் ஆகவேண்டும் .முட்டி மோதி பார்த்தாலும் எங்கெங்கு சென்றாலும் சரணாகதி இங்கு தான் ,இந்த சிவத்தில் தான் கிடக்கிறது.வேண்டுபவன யாவும் தருவான் சிவன் ,சிவன்  பெருமை எண்ணி எண்ணி , சிவன் தாள் சிந்தை பணிய ,அவன் பாதம் பணிந்து சரணாகதி யடைய  சிவமே ஆற்றலாய் அலையாய் மாறி  தீர்வாய் வருவான் ,இன்னல் நீக்கி இன்பம் தருவான் சிவன் .!!! சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும் .!!! ஆழமாய் அகலமாய்  வெற்றிடமாய்  விரிந்து விரிந்து சென்றுகொண்டேயிருக்கும்  அடி நுனி காண இயலா தன்மை நிறைந்தோனே !! நின் திருவடிகள் வெல்க !!மெல்லியதாய் மிக மெல்லியதாய் அனுவிலுள்ளும்  மிக பிரம்மாண்டஆற்றல் கொண்ட மிக நுண்ணியனே !!தூயோனே !! நின் பெருமை என்றென்றும் வாழ்க !! வேந்தனே !! வேதமே !! வேதத்தின் சாரமே !! எம் நாயகனே !! எம் பெருமானே !! எமை ஆட்கொண்ட பெருமானே !!  என்றும் நீயே அறிவில் தெளிவில் முதன்மையாய் இருக்கிறாய் !!நின் வியக்கும் அதி நுட்ப தன்மை என்