Posts

Showing posts from October, 2020

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

Image
பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி     புராந்தகி த்ரியம்பகி எழில்   புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள     புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி மனாதீத நாயகி குணாதீத     நாதாந்த சத்திஎன்றுன்   நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே     நானுச்ச ரிக்கவசமோ ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ     அகிலாண்ட கோடிஈன்ற   அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்     ஆனந்த ரூபமயிலே வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்     வளமருவு தேவைஅரசே   வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை     வளர்காத லிப்பெண்உமையே.  தாயுமானவ  ஸ்வாமிகள்  ராமேஸ்வரம் அம்பாள்  பற்றி  எழுதிய  மிக அற்புதமான  பாடல் .அனைவரும்  படித்து  பொருள் உணர்ந்து பயன்பெறவேண்டிய  தெய்வீக   பாடல் . எங்கெங்கும்  நிறைந்திருப்பவளே !! சிருஷ்டிக்கு  முன்னே  தோன்றிய  மிக பழமையானவளே  !! சர்வ  மங்களம்  நிறைந்தவளே !! அனைத்தையும்   ஆளும்  சர்வேஸ்வரியே  !! முப்புரம்  எரித்தவளே  1!  மூன்று திருவிழிகளையுடையவளே  !!மிக  அற்புதமான  குணங்களை  கொண்ட சக்தியே  !! மனாதீத , குணாதீத ,    நாதாந்த சத்தியே !! இப்படி  இடைவிடாது  ஓதும்  உன் அடியார்களின்  திருநாமங்களை  நான்  உனது அருளால்  ஓதும் 

இறைவழி நல்வழி

Image
 எல்லாம்  வல்ல பரம்பொருளே !! உலகமெல்லாம்  காத்தருளும்  உமையவள்  நாயகனே  !! உன்னத அருள் கொண்ட பேராற்றலே !! பெரும்  வலிமைகொண்ட  கட்டுக்கடங்கா  ஷக்தியுடைய  பேரானந்தமே !!   எம் பெருமானே!! பேரின்ப வெள்ளமே !!  கோடான  கோடி ஜீவராசிகளுக்கு  க்ஷணப்பொழுதில்  தீர்வு தரும்  பெரியோனே !! தூயோனே !!மாயோனே !! உன் பொற்பாதம் சரணம்  ! தேவியின்   அற்புதங்கள்   ஆயிரம் ஆயிரம் ஒவ்வொரு ஜீவனுள்ளும் அவள்  உணர்த்திக்கொண்டிருக்கும்  தத்துவங்கள்  ஆயிரம் ஆயிரம் .ஆழ்ந்து  ஆழ்ந்து  பல லட்சங்கள்  தேவியின்  நாமங்களை  உச்சரித்து  ,அவளின்  திருப்பாதம்  பணிய  ,அலையாய்  பேரலையாய்  எழுவாள்.அதன் பிறகு தேவி  என்று  ஆழ்ந்து  நினைத்தாலே  ஒரு அற்புதம்  நிறைந்த  உலகிற்கு அழைத்துசெல்கிறாள் .என்றுமே  மகிழ்ச்சியும்  உற்சாகமும்  துள்ளலும்  ஆனந்தமும்  அருவி  போல  ஆர்ப்பரித்து  ஓடுகிறது அவள்  அருகில் .இன்னும்  கடந்து  செல்லவேண்டிய  தூரம்  அதிகம்  இருக்கின்றது .ஆனால்  தொலை தூரத்தில்  இருந்துகொண்டே  அவளிடம்  சரணாகதியடைய ,ஒரு அற்புதமான  செழுமை நிறைந்த  மென்மை  அலைகளை  வாரி வழங்குகிறாள் .எப்படிப்பட்ட  ஒரு அலை  இயக்கம்  இவள் அருகிலே .கவலையா ,