Posts

Showing posts from December, 2019

சிந்தனைக்கு எட்டாத சிவரூபம்...!!!

Image
பரவெளியில் ஆடி அசைந்து திருத்தாண்டவம் நிகழ்த்திக்கொண்டிருக்கும்    மஹாசிவமே !! கோடிக்கணக்கான அண்ட பேரண்ட துகள்கலெல்லாம் நின் அசைவை எதிர் நோக்கியே காலம் காலமாய் காத்துக் கிடக்கிறது . !! எக்காலம் பொற்காலம்   , எது    நன்மை தரும் காலம் , எக்காலத்தில் எந்த நுட்பம் வெளிவரவேண்டும் , எக்காலத்தில் எந்தவொரு உயிரின்   கர்மவினை கலயப்படவேண்டும் ,   என்பனவெல்லாம்   தீர்மானித்து   அ ச்சு பிசகாமால் அற்புதமாய் அருள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தூயஜோதியே !   அருள் தாண்டவமாடும் அற்புத பரப்பிரம்மமே !! ஒளியே ! பேரொளியே !! நாயகனே !! நான்மறையே !! தட்டுத்தடுமாறும் போதெல்லாம் நின் சூட்சும அலையே எம்மை தூக்கிதலைநிமிர்த்தி வாழவைக்கிறது எம்பெருமானே!! ஈசனே !! நேசனே!ஆருயிர் வேந்தே !     நீ இட்ட பிச்சை தானே இந்த உயிர் உடல் உள்ளம் யாவுமே ! .ஒரு அருகதையும் அற்றவன் யாம் .எம்முள்ளும் ஆங்காங்கே அத்திபூத்தார் போல நின் சூட்சும அலைகள்    கொண்டு எம் நெஞ்சத்தை வருடிய    நொடிகள் ,  தருணம்  யாவும்  அலையாய் ஒளியாய் ஆற்றலாய் அற்புதமாய்    நெஞ்சமெங்கும் விரிந்து நின் ஆழ்ந்த பேரமைதியில் சிறிதுநேரம் கண்அயர  வழிவகுத்திருக