Posts

Showing posts from February, 2020

இருளும் ஒளியும் !!

Image
எமைஆளும்  ஈசனே !! சர்வேஸ்வரனே !! ஆதி மூலமே !!  ஒளியாய் பேரொளியாய் எங்கும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த பரப்பிரம்மமே !!மகாதேவனே !!நினதருளால் காலசக்கரம் சுழல்கிறது .யுகங்கள் ஆயிரம் ஆயிரம் பிறழ்கிறது ...எத்தனை எத்தனை கோடி கோடி ஜீவராசிகள் அதன் குணாதிசயங்கள் அழகு,  திறமை, மதி நுட்பம் ..அப்பப்பா..... யுகம் யுகமாய் ஆயிரம் ஆயிரம் ,கோடி கோடி, அண்ட பேரண்ட ஜீவராசிகளை பிறப்பெடுக்கவைத்து காத்து  அமுதுபடைத்து ,அரவணைக்கும் , சிந்திக்க ,கணிக்க, இயலாத எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பேரொளியே !!  என்னவென்று சொல்வேன் நின் மாபெரும் தன்மையினை !! எப்படி உரைப்பேன் நின் கருணை அலைகள் எம்முள் அலையாய் ஏற்படுத்திய தாக்கங்களை !! கண்டு வியந்தேன் பலமுறை எம்முள்ளும் காட்சியாய் எம் நெற்றியுள் புருவ மத்தியுள் ஒளியாய், என்றும் சுடரொளிபோல ,அமைதியாய் ஆடாது அசையாது இதமான  பௌர்ணமி நிலவைப்போல  ஒவ்வொரு மனித உயிருள்ளும் நெற்றியில் நெற்றிகண்ணில் ஒளியாய் சுடர்விடும் வற்றா பேரொளியே ! ..எங்கள் நாயகனே !! பேரின்ப ஒளியே !! ஆற்றலே !! சத்குருவே !! சுத்த பரப்பிரம்மமே !! என்றும் நின் திருவடியில் சரணாகதி !! இரு