Posts

Showing posts from May, 2018

மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி - கிண்டி சென்னை

Image
இறை எனும் அகண்டாகார பேரொளி தம் அகத்தே கொண்டிருக்கும் கற்பனைகெட்டா ஆற்றலை , அதன் அற்புதத்தை   தாம் படைத்த எண்ணிலடங்கா உலகத்திற்கும் அதில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் தந்துகொண்டேயிருக்கிறது.அன்பும் கருணையும் எங்கெங்கும் நிரப்பி அனைத்தையும் ஆனந்தம் கொள்ளச்செய்கிறது.என்றும் என்றென்றும் மாற்றதை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறது. எதுவும் நிலையானது இல்லையப்பா இங்கே, மாற்றம் மற்றுமே நிலையானது என்பதை சொல்லாமல் சொல்லி ஒன்றை  மற்றொண்டாய் மாற்றிக்கொண்டேயிருக்கிறது .அன்பு எனும் ஒரே சூட்சுமம் கொண்டு அணு முதல் பேரண்டம் வரையிலும்  அதில் வாழும் கோடான கோடி ஜீவராசிகளையும் நொடி பொழுதில் தொடர்பு கொள்ளும் அதி சூட்சும வித்தையையும் உருவாக்கி ,அன்பாய் ,பேரன்பாய்,அறிவாய்,தெளிவாய் முழுமையாய் யாவற்றையும் ஷன பொழுதுகூட விட்டு பிரியாமல் தமது படைப்பின் திறம் மிளிரும் வண்ணம் , தந்தையாய் ,தாயாய்,சிவமாய் ,சக்தியாய்,விஷ்ணுவாய்,அல்லா,இயேசு என நீளும் பெயர்கொண்டு யாவற்றையும் கட்டியனைத்து கண்ணை இமை காப்பது போல காத்துக்கொண்டும்,அன்பும் கருணையும் வழங்கிக்கொண்டும் இருக்கிறது. இந்த மாபெரும் பிரமாண்ட இறைபயணத்தில் ,தமது அன்பை