Posts

Showing posts from November, 2015

மெய்கண்ட சித்தர் குகை - கன்னிவாடி

Image
உள்ளம்  இறைவன் வாழும் ஆலயம்.சிவன் வாழும் ஆலயம். எதுவும் இங்கே சாத்தியம்.அனைவரையும் வாழ்த்தவும் முடியும் இல்லை வேறொரு வழியில் சபிக்கவும் முடியும்.அந்த அளவுக்கு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டது.கர்மவினை அதன் தன்மைக்கேற்ப ஆட்டிபடைக்கும் கோள்கள் ,அதன் காரணமாக வேலைபளு,அதனால்  நாட்போக்கில் உண்டான  மனகசப்பு,ஒரு இறுக்கம் ,இவை யாவும் உள்ளத்தை இறைவன் வாழும் ஆலயத்தை கலங்கப்படுத்திவிடுகிறது.இந்த கலங்கத்தை சரிபடுத்த தூய்மை இங்கே அவசியமாகிறது.இதற்கு நிறைய வழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் சிவதொண்டில் ஈடுபடுவது,சிவதரிசனம் காண்பது, தவம் செய்து இறைவன் ஆசிகளை பெறுவது, ஜீவ சமாதி சென்று சித்தர் ஆசிகளை பெறுவது,அன்பால் உள்ளம் உருகி ஆழ்ந்து அனைவரையும் வாழ்த்துவது என நிறையவழிகள் உள்ளது.ஏதேனும் ஒரு வகையில் இறைநிலையை உணர்தல் அவசியமாகிறது. இல்லை எனில் ஆன்மீக வாழ்வில் இருந்துகொண்டு இந்த பொருள் தேடும் வாழ்கை வாழ்வது என்பது கடினமாகிவிடுகிறது. வாருங்கள் கன்னிவாடி எனும் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கு செல்வோம்.இங்கே செல்வதற்கு நிறைய வழி  இருக்கிறது.ஓட்டன்சத்திரத்திலிருந்தும்,திண்டுக்கல்லிருந்தும் வரலாம்.யாம் சென்ற