Posts

Showing posts from August, 2019

குருவைத்தேடி...!!!

Image
எல்லாம் வல்ல பரம் பொருளே !! ஆதி முதல் குருவே..!! கேட்பாரற்று சோவென கிடக்கும் பரவெளியே ..!! எல்லையே இல்லாமல் விரிந்துகொண்டேயிருக்கும் நுண்ணிய அணுக்கள் நிறைந்த  ஆற்றல் உடையோனே!! ஆதியாய் ஜோதியாய் அலையாய் எம்முள் வந்து ,எம் மனதுள் நின்று , எம் உயிருள் நுழைந்து,அழகாய் அற்புதமாய் வந்து, நின்திருத்தாண்டவத்தை நிகழ்த்துவாய் எம் நாயகனே ..!! எம் உள்ளத்துள் நின் அலைகள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எமக்கு பேரின்பமே .!! நின் அருள் அலைகள் தரும் ஒரு இதம், ஒரு சுகம்,யாருமே எமக்கு இப்பிரபஞ்சத்தில் தரஇயலாது எம் பெம்மானே !! நின்  அருள் அலைகளால் தெறித்து ஓடுகிறது எம்மை சூழ்ந்த அஞ்ஞானம் ,நின்  அருள் அலைகளால் புறமுதுகிட்டு ஓடுகிறது எம்மை ஆட்டிபடைத்த கர்மவினைகள் ..!!  நின்னை எம்முள் எம் உள்ளத்துள் கொண்டுவர எதுவும் தேவையில்லை ,எங்கு அழைத்தாலும் வருகிறாய் எங்கெங்கும் இருக்கிறாய்.எங்கெல்லாம் வெளிஇருக்கிறதோ அங்கெல்லாம் நின் அருளும் இருக்கிறது.நின்னை நினைத்த மாத்திரத்தில் ஜிவ்வென பற்றிக்கொள்கிறது எம் உள்ளம் ,உள்ளத்தில் அமுதமழை பொழிகிறது ,ஆனந்தம் நிறைகிறது அமைதி பேரமைதி என அது தாமாய் மிளிர்கிறது.நின் அருள் அலைகள