Posts

Showing posts from 2016

திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

Image
எங்கும் சிவம் , எதிலும் சிவம் .சிவமின்றி எதுவும் இல்லை .எல்லாம் சிவமே.எதை பிடித்து அதன் மூலம் நோக்கினும் சிவமே முடிவாய் வருகிறது.எம் தந்தையின் முகம் நோக்கினும் சிவமே , அன்பால் கசிந்து எவை நோக்கினும் சிவமே.சிவத்தோடு இருந்த காலம் , வாழ்வின் அர்த்தமுள்ள முறையில் நேரங்களை   செலவழிக்கப்பட்ட ஒரு   பொற்காலம் , சிவமாய் இனி இருக்க போகும்   காலமும் பொன்னான காலமே , சிவம் பற்றிய அலைகள் நினைத்தாலே , உலகின் எந்த மூலையில் எங்கு இருந்தாலும் , எந்த நிலையில் இருந்தாலும் , ஆற்றல் மிக்க , அதிர்வு மிக்க அலைகளை நொடிப்பொழுதில்   உணரவைத்து , இருக்கும் ஆன்மாவின் நிலையினை மேலும் மேலும் அதீத உயரத்திற்கு இழுத்துச்செல்லும் அற்புதம் நிகழ்கிறது.   சிவம் பற்றிய சிந்தனை , சிவம் பற்றிய கனவுகள் , சிவம் பற்றிய நிகழ்வுகள் , சிவம் பற்றிய தொண்டு , சிவனுக்கு ஆலயம் அமைத்தல் , போன்ற சிந்தனை , செயல் , இவை யாவுமே ஏதோ சும்மாவருவதில்லை .அதற்குரிய ப்ராப்தம் (கொடுப்பினை) இருந்தால் மட்டுமே நிகழ்கிறது.இதுவே பழமை , இதுவே புதுமை , பழைமைக்கும் பழைமை , புதுமைக்கும் புதுமை.சிவனை நினைத்தால் சிவன் முக்தியை நோக்கி ம