Posts

Showing posts from May, 2017

ஸ்ரீ பைரவ வாகனம் ..!!!

Image
பிரபஞ்ச நாயகனே!! பெம்மானே !! தூசியினும் தூசியாய் இருக்கும் ,எம்மால் எம் கற்பனையால் கூட ,நின் அருள் தாண்டவ அலைகள் நடத்தும் அற்புத அரங்கேற்றம் சிறு  துளி அளவுகூட  புரிந்துகொள்ளஇயலவில்லை.நித்தம் ஒரு புதுமை என எண்ணில் அடங்கா கோள்கள் உருவாக்கும்  பேராற்றல் கொண்ட நாயகனே ..!! கோடான கோடி ஜீவன்களையும் உருவாக்கி,காத்து,அரவணைத்து ,அழித்து ,புரிய இயலாத விந்தைபுரியும் ஆதி அந்தம் இல்லாத ஆயிரம் ஆயிரம் கோடி சூரிய ஜோதியே ...!!தூயோனே ,,!! மறையோனே ..!!   நிறைந்தோனே ..!! நின் பெருமை எண்ணி ,செய்வதறியாது, நெக்குருகி நெஞ்சம் நிறைந்து ,உள்ளம் உறைந்து நின் தாள் பணிந்து போற்றி வீழ்ந்து வணங்குகின்றோம்,!!அருள் புரிவாய் அய்யனே .!! நின் பாதம் சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!!சரணாகதி ..!!! சரணாகதி ..!!!சரணாகதி ..!!! ஏழரைநாட்டு சனியே பாடாய் படுத்தும் .அதுவும் ஏழரைநாட்டு சனியில் ஜென்மசனி ஒருவருக்கு நடந்தால் ,சொல்லவே வேண்டாம்.அது உடம்பில் ஒரு மந்தநிலையை ஏற்படுத்தும்.ஒரு சாதாரண வேலையை கூட செய்யவிடாமல் சுத்த சோம்பேறியாக்கிவிடும்.எதுவும் புரியவிடாது .எங்கே எப்போ வெளிச்சம் வரும் என தெரியாது.எரும

சிவாய எனும் அட்சரம்..!!!

Image
ஆயிரம் கோடி சூரிய ஜோதி, எங்கும் நிறைந்து ,எங்கெங்கும் நிறைந்து ,ஆதியாய் அனாதியாய் நிற்கும் அற்புதம்.இதுவே  கூனி குறுகி , எல்லோர் உள்ளங்களிலும் நான் எனும் அகந்தையாய் நின்று,இதன் தன்மை யாதென ஆழ்ந்து செல்ல,இந்த அகந்தையை உடைத்தெறிந்து ,எங்கெங்கும் நீண்டு விரிந்து,அடர்ந்து படர்ந்து, நீக்கமற நிறைந்து,யாவற்றையும் சூழ்ந்து அன்பால் அரவணைக்கும் எம்பெருமானின் நம் பெருமானின் அலைகள் நிறைந்த இருப்பிடம் நோக்கி ஈர்த்துச்செல்கிறது.எம்மால் எதுவும் இல்லை எல்லாம் அந்த எல்லைஇல்லா பேரொளியின் கருணையே என , உடம்பு ,மனம், இவற்றை கடந்து சென்றாலே,இறை அலைகள் முழுவதும் நிறைந்துகொள்ளும் அற்புதம் நிகழ்கிறது. எந்த தெய்வவழி சென்றாலும், அதன் முடிவு எல்லையில்லா பெருமானிடமே அழைத்துச்செல்கிறது.எம் பெருமானே வெவ்வேறு தோற்றங்களில் வெவ்வேறு தெய்வங்களாக கோடி கோடி உயிர்களின் உள்ளம் கவர்ந்த தெய்வமாக ஏதேனும் ஒரு வடிவில் பொருளாகவோ,வடிவமாகவோ ,நம்பிக்கையாகவோ ஏதும் அற்ற சூட்சுமமாகவோ இருந்துகொண்டு அருள்ஆட்சி நடத்தும் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது,எளிதில் நம் மீது உரசிச்செல்லும் காற்றே மிக சிறந்த உதாரணம் .காற்று அனைத்திற்கும