Posts

Showing posts from December, 2014

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரால் ஜீவ சமாதி.!!

Image
அன்பின் வழி வந்தவர்கள்,அன்போடு இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், இவர்கள் அருகில் இருந்தாலோ அல்லது அவர்கள் அருகில் நாம் சென்றாலோ அந்த கருணை அலைகள் நம்மையும் சூழ்ந்துகொள்ளும்.எங்கெங்கும் ஒரு வித அமைதி அலைகள் மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்துகொள்ளும்.அன்பு ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை இல்லாமல் செல்லும் போது இறைநிலை ஆகிறது.எல்லை இல்லா அன்பு இறைநிலை.அன்பில்  மட்டுமே அனைத்தும் தம் நிலை இழந்து கரைந்துவிடுகிறது.இருக்கும் இடம் தெரியாது  போய்விடுகிறது.எங்கெல்லாம் அன்பின் அலை தவழ்கிறதோ அங்கெல்லாம், இறை நிலை உள்ளது. தந்தை ஸ்ரீ அகத்திய மகான்   " அன்பு  என்றால் என்ன  ?  அதன் ஆழம் என்ன ..? "  என்று  எமக்கு சூட்சுமமாக உணர்த்திய பிறகே, ஒரு அலைகளின் அன்பு பசை எம்முள், எம் சூட்சும தேகத்தில் திணித்த பிறகே பல் வேறு மாற்றங்களை உணர்ந்தோம்.அன்பின் ஆற்றல் கண்டு வியந்தோம் பல முறை.(( இது அன்பின் ஆழம்.... கட்டுரை வாசிக்கவும் )அன்பெனும் அதிர்வு குறைந்த மன நிலையில் இருக்க, பார்க்கும் எதுவும், கேட்கும் எதுவும், நடக்கும் நிகழ்வு எதுவும், ஒரு சுகமான ஆனந்தமே.! எமது வாழ்வில்  அன்புநிறைந்த பல்வேறு ஆத்மா