Posts

Showing posts from March, 2019

தாய் சக்தி - II

Image
பிரபஞ்சம் மிக அழகானது.தாம் படைத்த கோடான கோடி உயிர்களை காத்து அரவணைத்து அருள் ஆசி செய்கிறது தாயெனும் மாபெரும் சக்தி .நாம் வாழும் இந்த சூரியகுடும்பம் போல் ஆயிரம் ஆயிரம் சூரிய குடும்பங்களையும் ,அதில் வாழும் உயிர்களையும் மற்றும் தாம் படைத்த  கோடான கோடி ஜீவராசிகளையும் காத்து அரவணைத்து ,அன்பும் கருணையும் நிரப்பி அருள் ஆசி செய்து  ஆட்சிசெய்கிறாள் அன்னையவள்.ஒவ்வொரு உயிரும் அற்புதமானது.ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை நிறைந்தது .ஒவ்வொரு உயிரும் ஆழ்ந்து விரிந்து படர்ந்து அதன் திறமையை இந்த பிரபஞ்சஎல்லை வரை விரிக்கும் அளவிற்கு வெளியும் ஆற்றலும் நிறைந்து படைக்கப்பட்டிருக்கிறது இந்த பிரபஞ்சம் . பிரம்மாண்டமாய் மிக பிரம்மண்டமாய் விரிந்துகொண்டேயிருக்கிறது இறை.இங்கே யாருக்கும் பாதகம் நிகழாதமுறையில் செய்யப்படும் ஒவ்வொரு செயலின் விளைவும் மிக நேர்த்தியானது அதில் தோல்விகள் வெற்றிகள் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை.இங்கே எல்லாம் ஒன்றுதான் எந்த போட்டியும் இல்லை.பொறாமையும் இல்லை.ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு ஜடமும் அதன் இயல்பில் ,அது என்னகாரணத்திற்காக படைக்கப்பட்டதோ அதை நிறைவேற்றி , இயல்போடு ஒவ்வொரு நொடிப்பொழு