Posts

Showing posts from June, 2010

இது கருணை மழை..!!

Image
எனது அம்மா ஒருமுறை அகத்தியர் மகானின் தரிசனம் பெற்றார்கள்.அந்த பெரியவர் வந்து இங்கே இந்த இடத்தில் ,ஒரு நீண்ட ஜடா முடியுடன் ,ஒரு வேஷ்டிஉடன் இருந்தார்.நல்ல தேஜஸ் உள்ள முகம்.கருணை பார்வை .கையில் ஏதோ வைத்திருக்கிறார்.அது என்னவென்று தெரியவில்லை.ஒரு சில வினாடி ,அப்படி இங்கே அமர்ந்தார் என்றார்கள் .உடனே நான் "நீ ஏதாவது அவரிடம் ஏதும் கேள்வி கேட்டாயா ?"என்றேன். "என்னால் எதுவும் கேட்கவும் முடியவில்லை ,கேட்பதற்கும்  ஒன்றும் இல்லை அப்போது" என்றார்கள்.இந்த மகானின் தரிசனத்திற்கு காரணம் ,என் அம்மா தினந்தோறும் சொல்லும் "ஒம் அகத்தீஸ்வராய நமஹ!" என்னும் ஒரு மிக வலிமையான மந்திரத்தின் ஆற்றல் ஆகும். இதனை தொலைபேசியில் கேட்டு தெரிந்துகொண்டேன்.அவ்வளவுதான் ,பிறகு என் மனம் ஆழ்ந்து,மென்மையானது,இந்த நிகழ்வால் .பெரியவர் இப்படி இருந்தார் என்று சொன்ன உடனே,என் மனதுள்ளே ஒரு பிளாஷ் .அதனை என் மனம் நன்றாக இப்படிதான் இருந்திருப்பார் என்று உணர்ந்தது. அலுவலக வேலை பார்த்து உலர்ந்து,வாடிய மனம் இதனை கேட்ட உடனே ,தன் பிடியிலிருந்து தளர்ந்தது.இறுக்க பிடியிலிருந்து மனதுள்ளே, ஒரு சிறு நீர்த்துளி