Posts

Showing posts from June, 2015

ஸ்ரீ பைரவம்...!!!

Image
காலம் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும் ஒரு முடிவற்ற நிகழ்வு.ஆயிரமாயிரம் யுகங்களாய் இந்த காலம் சுழன்று கொண்டேஇருக்கிறது,இன்னும் சுழன்றுகொண்டேதான் இருக்கப்போகிறது.ஜனனம் எடுத்தவர் மரணம் ஆகுவதும்,மரணம் எடுத்தவர் மீண்டும் ஜனனம் ஆவதும்  சென்றுகொண்டேஇருக்கிறது.இந்த சுழற்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சக்தி இவை அனைத்தையும் கவனித்துக்கொண்டு,யுகம் யுகமாய் ,கம்பீரமாய்,பிரம்மாண்டமாய் ,ஒளிப்பிளம்பாய் வலம் வந்துகொண்டிருக்கிறது.அந்த சக்தியின் அதிர்வு மிகமிக அதிகம் .தாம் பார்க்கும் எத்தனை ஆயிரம் உயிர்களுக்கும் நொடிப்பொழுதில் இருக்கும் அலையியக்கத்தை  மாற்றி அமைத்து,இறைவெளிப்பாதையில் உட்செலுத்தி ,பேரொளியினை நிரப்பி,ஜீவமுக்தி அளித்துவிடும் சக்திபெற்றது.அப்படிப்பட்ட ஒரு மாபெரும்  மிக அதீத அதிர்வு உணர்வு கொண்ட சக்தி, ஒருபேராற்றல்,ஒரு கரிய நிறமுள்ள ,கட்டுகடங்காத அலைகளின்ஆற்றல் கொண்டுள்ள சக்திதான் பைரவம் , பைரவர் ,வயிரவர் ,காலபைரவர்  என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இவர் காலத்தையும் வெல்வார்.காலனையும் வெல்வார்.தொடக்கம் முடிவு  ஆகிய எதுவும் அறிய இயலாத  சிவத்திலிருந்து பிறந்து சிவத்தின் ஒரு