Posts

Showing posts from December, 2018

ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சித்தர் -திருக்கழுக்குன்றம்

Image
எம்பெருமானே ..!! ஈசனே ..!! சர்வேஸ்வரனே ..!! காலத்தின் நாயகனே ..!! எம் புயங்கப்பெருமானே ..!! சகலமும் நிறைந்தோனே ..!! தூய வெண்பனி போல  உள்ளத்தை கசியவைக்கும் நின் தார்மீக அன்பெனும் அலைகளால் எம்மை உறையவைத்து, கண்களால் பார்க்கும் தூரம் வரைக்கும்,காதுகளால் கேட்கும் தூரம் வரைக்கும் , ஜடமாகவும் ஜீவனாகவும் காட்சியளித்து ,இன்னும் தாண்டி பார்க்க இயலாத ,கேட்க இயலாத எல்லைகளற்ற  எங்கோ....எங்கெங்கோ....அடர்ந்து படர்ந்த வெளியில் ஊமையாக ,சப்தமற்று ,நிறமற்று ,மொழியற்று கேட்பாரட்று கிடக்கும் ஒன்றுமில்லா ஒன்றோனே..!! அன்பெனும் அலைகொண்டே நின்னை, நின்  பெருமையினை நின் கருணையினை , எல்லா உயிர்களையும் யாவற்றையும் வாரியனைக்கும் நின் மாசில்லா பாசத்தன்மையினை, நுட்பத்தை  அதிநுட்பத்தை ,எண்ணி எண்ணி பெருமை கொண்டு ,விம்மி விம்மி, விழிகள் பிதிங்கி ,உள்ளம் நெக்குருகி செய்வதறியாது சரணாகதியில் நிற்கின்றோம் ...தூயோனே வெட்டவேளியோனே !!ஜோதியில் ஜோதியே ..!!! ஆதியே ..!! அருள் ஆசிகள் தருவாய் எம்பெருமானே .... என்றென்றும் நின் திருவடியில் வீழ்ந்து வணங்குகின்றோம்.!! எவ்வளவு தான் கற்றறிந்தாலும் அனுபவத்தில் கிடைக்கும்