Posts

Showing posts from September, 2018

இறை தேடும் பயணத்தில் II ....!!!

Image
அன்பெனும் ஈர்ப்பு பசை ஒன்றை ,நீ படைத்த அத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி உயிருள்ளே அணுவிலும் அணுவாய் நுழைத்து வைத்து ,யாவற்றையும் ஈர்த்து பிடித்து ,காத்து,ஒன்றை மற்றொன்டாய் மாற்றி மாற்றி ,வெட்டவெளியிலிருந்து வந்ததை எல்லாம் மீண்டும் வெட்டவெளி செல்லும் வரை ,அதனுள் நீ நடத்தும் நாடகம் ,பாச  போராட்டம்,அன்பால் அரவணைப்பு ,இன்பம் ,துன்பம்,புகழ், பேரின்பம் ,அமைதி .பேரமைதி என நீண்டுகொண்டே செல்லும்  இந்த மாற்றங்களை நடத்திக்கொண்டிருக்கும் நின் திறம் எண்ணி எண்ணி , வியந்து,வியந்து, எதுவம் நிரந்தமில்லை ,இதுவும் கடந்து போகும் எல்லா பிரச்சினைக்கும் தீர்வும்  அதில் தீர்ப்பாய் வந்து நிற்கும் நின் வியத்தகு ஆற்றலையும் பிரமித்து ,வெட்கி தலைகுனிந்து ,நின் திருவடி வீழ்கிறேன்  பலமுறை...மாபெரும் வற்றா பேராற்றலே ..!! பிரபஞ்ச நாயகனே !! எல்லையில்லா கருணை கடலே ..!! அகன்று விரிந்த சுத்தவெளியோனே !! சூட்சும அலைகள் சூழ்ந்த சுத்த பரப்பிரம்மமே !! சுடர்மிகு ஒளியே ..!! ஜோதியே ..!! ஜோதியில் ஜோதியே..!!! மாணிக்க வாசகனார் கண்டு வியந்த ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே ..!! ஆனந்தம் நிறைந்தோனே !!  நின் திருவடி வாழ்க !! என்றென்றும் நின் பாதங்