Posts

Showing posts from September, 2017

காருண்யவாராம் ...!!!

Image
மதுரையின் centre of attraction ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவில்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் ஒரே இடம் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோவிலே.ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா.ஒவ்வொரு நாளும் ஒரு அழகான நிகழ்வுகள்,நிகழ்ச்சிகள்  என அம்பாளின் அருள் கருணையால் இவை யாவும்  தொடர்ந்தவண்ணம் இருந்துகொண்டு வருவோர் செல்வோர் என அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.மதுரையில் இருப்பவர்களே எத்தனை முறை அம்பாளை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது என எண்ணி பாருங்கள்.தினந்தோறும் கிடைத்தால் தலை எழுத்தே மாறிவிடும்.காருண்ய வாராம் நிதிம்.. கருணை கடல்....எல்லையே இல்லாத கருணை நிறைந்தவள்...மீனாட்சி அம்பாளின் தரிசனம் கிடைப்பது  என்பது மிக பெரிய பாக்கியம் அதுவும் அவள் நம்மை அவள் கருணை மழையில் நனையவைத்துவிட்டால் என்றால் அந்த நாள் மிக புனித நாளே அது ஒரு பூர்வ ஜென்ம புண்ணியமே.அம்பாளின் அருள் அலைகள் சூழ்ந்து கருவறையே மிக அற்புதமாக ஜொலிக்கிறது. கிட்டதட்ட இங்கு வருவோரின்  ஒரு சராசரி மனநிலை என்னவென்றால் அம்பாள் பார்த்து,சுந்தரேசுவரர் பார்த்து,பொற்தாமரை குளம் பார்த்து ,வல்லப சித்தர் ஜீவசமாதி பார்த்து என பல இடங்களை