Posts

Showing posts from January, 2014

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

Image
உலகத்திலே என்றும் ஆன்மீகம் பூத்து குலுங்கும் நாடு இந்தியா.இங்குதான் இயற்கை இதற்கென   சரியான   தட்ப வெட்பம் மற்றும்   சூழலை   உருவாக்கியுள்ளது.எத்தனையோ ஆயிரம் ஆயிரம் சித்தர்கள் , இன்னும் இந்த பூமியில் ஆங்காங்கே சூட்சும உடலில்   வாழ்ந்துகொண்டு   தாம் இருக்கும் இடமெங்கும் , தம்மை நோக்கி வரும் அன்பர்களுக்கும் அருள்ஆசிகள் கொடுத்துக்கொண்டும் , புனித அலைகளை எங்கெங்கும் பரப்பும் மாபெரும் அருட்சேவை செய்துகொண்டிருகிக்கின்றார்கள்! அப்படி மாகன்களும் சித்தர்களும் கூடி   அருள் அலைகளில் உறைந்து கிடக்கும் ஒரு இடம் தான் நினைத்தாலே முக்தி தரும்   திருவண்ணாமலை.   நினைத்தாலே முக்தி தரும்   திருவண்ணாமலை   என்ற வாக்கியம்   எம் சிந்தனையுள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் கருவரையில் உள்ள சிவன் , கடந்த முறை எமக்கு ஏற்பட்ட அனுபவம் , அங்குள்ள சூட்சும அலைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்தோடியது. நினைத்தாலே எப்படி முக்தி தரும் ? அப்படி எனில் அந்த அளவுக்கு அதீத சக்தி அங்கே குடிகொண்டிருக்கிறதல்லவா ?  நினைக்கும்   எண்ணம், எப்படி இந்த நினைவலைகளை   எல்லாம் ஒரு முகப்படுத்தி