Posts

Showing posts from February, 2015

சிவ தரிசனம்...!!!

Image
சிவம் எதற்கும் ஒரு மூலம் இவன். எதுவும் இவனுள் அடங்கும் .எங்கும் இவன் இருப்பான் .எவையும் இவனிடமிருந்தே பெறப்பட்டது.மாபெரும் பிரபஞ்ச ஆற்றல் இவனே .இவனே கூனி குறுகி ,தம் எல்லா ஆற்றலையும் ஒரு சிறு புள்ளியில் வைத்து,பிறகு அதே அச்சிறு புள்ளி தம்மை ,விரிவாக்கி அண்ட சராசரமாக விஸ்வரூபம் எடுத்து   தம்மை எங்குமாக வியாபிக்கும் தன்மையும் இவனே .இவனே மாற்றம். ஒன்றதை மற்றொன்டாக மாற்றிக்கொண்டே எதற்கும் ஒரு நிலையை நிரந்தரமாக தர மாட்டான் .இவன் ஒருவனே நிலையானவன்.இவனே அகம் .இவனே பிரம்மன்.இவனே விஷ்ணு. இவனுள் இருந்துதான் மற்ற அனைத்து தெய்வங்களும்.இவனை இவனுள் உணரும் ஒரு பயணத்தில் ஒரு கட்டம்(phase) தான் நாம் காணும் எந்த ஒரு ஜடமும் எந்த ஒரு உயிரும்.இவனை இவனே உணர்வது தான் முழுமை. இவன் தந்த மனதால் ,இவன் நாமம் புகழ் பாடி, இவன் நாமம் உணர்ந்து,நெகிழ்ந்து, இவனை இவனுள் உணர ,உருவாகும் ஒரு பேரானந்தம்.முழுமை ,தெளிவு,அமைதி,வார்த்தைகளுக்கு அகப்படாத ஒரு பேரின்பநிலை. இவனை உணர இவன் தந்த ஒரு மிகச்சிறந்த ஒரு கருவி இந்த மனம் .இந்த மனம் இவனை உணராத ஒரு நாளும் வீணே.எங்கும் பெருக்கெடுத்து வியாபிக்கும் தன்மை கொண்ட மனம்.எது