Posts

Showing posts from April, 2021

பேரமைதி நாயகா போற்றி......!!!

Image
இறையின் ஆசிகள் பெற்றவர்கள் தானே இங்கிருக்கும் யாவரும்.யாவருமே ஏதேனும் ஒரு விதத்தில் இறையோடு தொடர்புகள் கொண்டவர்கள் தானே.தன்னிச்சையாக செயல்படுவது போல ஒரு மாய வலையை நமக்கு நாமே வீசிக்கொண்டு ,சுயநலம் சேர்ந்துகொண்டு இறையின் மூல தொடர்புகளை மறந்துவிடுகின்றோம் அல்லவா.காலமெல்லாம் கர்ம வினையில் சுழல்கிறது.அனைவரும் இறையின் பிள்ளைகள் தானே.அன்பால் அடிபனியவேண்டும் .அன்பிற்கு உருகவேண்டும் இளகவேண்டும் .ஆனால் அடிமையாக இருக்ககூடாது.எந்த பழக்கத்திற்கும் எதற்கும்அடிமையாக இருக்கக்கூடாது.இறையோடு என்றும் அதன் தொடர்புகள் இருக்கட்டும்.இறைக்கும் நமக்கும் உண்டான அற்புத இணைப்பு என்றும் பெருகிக்கொண்டேயிருக்கட்டும் .ஒரு உயிரில் இறை அலைகள் உள்சென்றால் மட்டுமே அந்த நாட்கள் படைத்தவனுக்கு பெருமை சேர்க்கும் நாளாக மலர்கிறது .உயிரை இச்சையாக பெற்றவனுக்கும் பெருமை சேர்க்கும்.எத்தனையோ கோடான கோடி ஜீவராசிகளுக்கு கிடைக்காத ஒரு அற்புத பிறவி தானே இந்த மானுட பிறவி.சுழலில் சிக்கி யாவற்றையும் இழப்பதற்கா இந்த அதி அற்புத மானுட பிறவி.எது நடந்தாலும் ஈசனின் ஆணை துளிகூட பிறழாது நடந்தேறுகிறது.நடப்பவை நடக்கட்டும் .இறையோடு வாழ இறை சிந்தனைகள