Posts

Showing posts from March, 2020

உள்ளம் உருகட்டும் ...!!!

Image
எல்லையில்லா பெருங்கருணையுடைய பெரியோனே ..!! தூய பரப்பிரம்மமே ..!! மாசற்ற ஒளியே ..!! எண்ணத்தால் உள்ளத்தால்  உருகி உருகி  நின்னை, நின் அருள்தாண்டவ அலைகளை உணர வியல்கிறோம்,விளைவாக  உள்ளம் மாபெரும் நினது பேரன்பு அலைகளால் கசிந்து தெள்ளிய நீருற்று போல அருள்அலைகளை சுரக்கின்றது,கண்கள் குளமாகி கருணை அலைகளாக வழிந்தோடுகிறது,நெற்றியில் நினது அருள் ஜூவாலை சுடர்விட்டு பிரகாசம் கொள்கிறது. ஒவ்வொரு உயிருள்ளும் நீ அருள்சுடராய் இருக்கும் அற்புதம் அருள் ஒளியாய் வீசுகிறது என்பதை உணரமுடிகிறது. உள்ளம் உருகினால் மட்டுமே நீ அகப்படுகிறாய்.... மாசற்ற தூய அன்பாய் ..அன்பின் அலைகளாய் வெளிவருகிறாய் நின்னை வேறு எதுவும் கொண்டு உணர இயலாது, அடைய இயலாது அய்யனே ..!! ஈசனே !! மாபெரும்  இறைவா ...நெஞ்சம் நிறைந்தோனே ..!! .கேட்பாரற்று சோ....வென பரந்து,விரிந்து கிடக்கும் பிரபஞ்சவெளி நாயகனே ..!! பேறாற்றல் பெருங்கருணையுடையோனே ..!! நின்னை ஆழ்ந்து  ஆழ்ந்து நினைந்து,நினைந்து, உள்ளம் உருகி உருகி , உணர உணர ... உள்ளத்தில் சூழ்ந்த  இருள் விலகி ,உள்ளம் முன்னைவிட இன்னும் அதீத நம்பிக்கை பெற்று,நின் அருள் அலைகள் சூழ்ந்ததால் ஒரு வலுபெற