Posts

Showing posts from September, 2013

அகத்தீசனடி போற்றி.!!

Image
    அன்புள்ள நெஞ்சங்களே ! இங்கே மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் !இங்குள்ள நிகழ்வுகள் எல்லாம் இந்த சிற்றறிவிற்கு எட்டியவை மட்டுமே!இன்னும் எத்தனையோ கோடி பிரபஞ்ச ரகசியங்கள் எண்ணி அனுபவிக்க காத்துகிடக்கின்றது.தந்தையின் அரவணைப்பு இங்கே யாம் உணர ஒரு முழு காரணமாகிறது.இனம் அறியாது மொழி அறியாது இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எம்மையும், எம்மைப்போல் உள்ள அகத்திய உள்ளங்களையும், தந்தையின் அன்பும் , கருணையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.இப்படி செல் மகனே என்னும் தந்தையின் வேத வாக்கு,ஒரு தைரியத்தையும் நிறைவையும் அளித்து என்றும் எம்மை சூழ்ந்து அமைதியில் திளைக்க வைக்கிறது. என்ன உள் எழுதிவைக்கபட்டதோ அது கால சுழற்சிக்கேற்ப வெளிவந்து செயல்பட ஆரம்பிக்கும் இறைநிலையின் இயல்பு.எப்படி ஒரு மிக சிறிய ஆலமரத்தின் விதையிலிருந்து,காலத்திற்கேற்ப இலை,தண்டு,கிளைகள்,விழுதுகள் என மிக பிரமாண்ட மரம் வருகிறதோ அது போல, சூட்சும அலைகளால் சுருக்கி எழுதப்பட்ட இறை எழுத்து செயல்பட ஆரம்பிக்கும் விந்தை.இவர்களை போல பொருள்இல்லை,புகழ் இல்லை,இடமில்லை etc போன்ற பொறாமைக்கோ, comparisonக்கோ இங்கே