Posts

Showing posts from July, 2018

அன்பின் ஒரு துளி ..!!!

Image
உலகமெல்லாம் நீக்கமற நிறைந்தோனே !!  பூரணத்துவம் நிறைந்த மாபெரும் இறையே !!! .வற்றா பேரொளியே ! கோடான கோடி உயிர்களின் நெஞ்சத்துள் அன்பின் கசிவாய் வெளிப்படும் ,ஈர்ப்பு ஆற்றல் நிறைந்த பெம்மானே ..!!பெருங்கடல்களும் பிரம்மாண்ட மலைகளும் ,ஆர்பரிக்கும் அருவிகளும் பசுஞ்சோலைகளும்  என பரந்து விரிந்தோனே !! பெரும் அதிநுட்பம் நிறைந்தோனே ,பேரண்ட வெளியில் ஆடும் நின் தாண்டவத்தால் பல ஆயிரம் கோடி கோடி மாற்றங்களை உருவாக்கும் நாட்டியக்கூத்தனே !! போற்றுதலுக்குரியோனே !! நின் பொற்பாதம் பணிந்து வீழ்ந்து வணங்குகிறோம் ,நின் திருவருள் என்றும் எம் நெஞ்சத்துள் நிலைக்கச்செய்வாய் ,பெரியோனே !! சான்றோனே !! தன்னிகரில்லா எம் தலைவனே !! ஈசனே !! எம் நேசனே !! எம் நெஞ்சச்தோடு ஒன்றில் ஒன்றாய் உறைந்தோனே !! நின்திருவடி வாழ்க !! நின் திருவடியே என்றும் என்றென்றும்  எம்போன்றோருக்கு சரணாகதி !! அன்பு எனும் ஒரு சொல் ஏதோ கொஞ்சம் அதன் தாத்பர்யத்தை உணர்த்துகிறது.இது ஒருபுறம் பார்த்தால்அலை ஒரு அற்புதமான அலை ஒவ்வொரு ஜீவனுள்ளும்  சரியாக சொல்லவேண்டுமானால் ஒவ்வொரு அனுவுள்ளும் ஒவ்வொரு ஜடத்திலும் அதன் மூலகாரணமான ஒன்றாய் பின்னிப்பிணைந்துள்ளத