Posts

Showing posts from January, 2016

அன்பின் ஒரு துளி !!!

Image
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் எமக்கு   எப்பொழுதெல்லாம் ஒரு சிக்கல் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு பெரியவரை சந்திக்க முற்படுவோம்.ஆனால் அவரை பார்ப்பது  என்பது அவ்வளவு எளிதல்ல .பார்த்தவுடனே எதற்காக  நீ இங்கே வந்திருக்கிறாய் ?... ஒ இது தானா விஷயம் , தெளிவான உமது நாட்கள் ....அதோ தெரிகிறது.அது வரை அமைதி காத்திரு , இதோ யாம் சொல்லும் இதை செய் ...சத்குரு அருளினால் துயர் நீங்கும் ..ஜெய் சத்குரு.....என பிரித்து சுக்கு நூறாக கூறு போட்டுவிடுவார்.அவர் தற்பொழுது இல்லை.ஆனால் அவர் எமக்கு சொல்லிகொடுத்த ஒரு பயனுள்ள தகவலை இங்கே பகிர்கிறோம். கண்களை மூடிக்கொண்டு உன்னுள் ஓடும் சுவாசத்தை அதன் போக்கிலே எவ்வாறு உள்ளும் புறமும் செல்கிறது என்பதை மெதுவாக அதன் போக்கிலே கவனி, உன் மன ஓட்டம் குறையும்.மனதின் அதிர்வு அலை (frequency) குறையும்.பிறகு அவ்வாறு மேலும் கவனிக்க  சுவாசம் இடதுபுறமும் வலது புறமும் மாறி மாறி செல்லும்,மன அதிர்வு அலை மேலும் குறைய குறைய,சுவாசம் மிக மென்மையாய் மாறிவிடும்,இப்படி சுவாசம் மென்மையாய் (very subtle) மாறிவிடின்,சுழுமுனை ஆரம்பிக்கும் (சுவாசம் இரு புறமும் செல்லும்) எப்பொழுதெல்லாம் இருமுன