Posts

Showing posts from March, 2017

சிவமெனும் அற்புதம் !!!

Image
சிவமென்னும் அற்புதம்.சிவம் எப்படி இருக்கும் என்று நினைத்தாலே,கண்களை மூடிக்கொண்டு சிந்தித்தாலே  மனதின் அலை ஓட்டத்தை சற்றே குறைத்து ,குளுமை அலைகளால் சூழ்ந்து ,கவ்வி இழுக்கும் ஒரு அற்புதம் நிகழ்கிறது.எல்லாவற்றையும் சுருக்கி அணுவாக ,இன்னும் உள்ளே செல்ல அதன் மிக சிறிய அலைவடிவாக ,இன்னும் இன்னும் உள்ளே செல்லச்செல்ல எதுவுமே இல்லாத, ஆனால் எல்லாம் ஆன, ஒன்றும் இல்லாத ஒன்றாக இருக்கும் அற்புதம்.அலை பாயும் மனதிற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்து ,அதன் ஆதிமூலம் உணரவைக்கும் உண்மையின் உறைவிடம் சிவம்.சிவத்தை உணர்ந்தால் ஞானம்.சிவத்தை மறந்தால் ஊனம்.சிவமே எல்லாம் .சிவமே எங்கும் .சிவமே எங்கெங்கும்.சிவம் அறிய இப்பிறவி முயற்சி தோற்றாலும்  இனிவரும் ஒரு பிறவியில் சிவத்தோடு சிவமாக ஆகும் ஒரு பொன்னான காலம் வரும் என்பது உண்மை.நாள் தோறும் அழிந்துகொண்டிருக்கும் இந்த பூதஉடலுள்ளே ஒரு தற்காலிக பயணம் செய்துகொண்டிருக்கும் பேராற்றல் நாயகனின் இந்த உயிர் என்ற தூசியும் ஒரு சிவமே. ஒன்றை மற்றொண்டாய் மாற்றுவதும் சிவமே.அப்படி ஒன்றை மற்றொண்டாய் மாற்றிக்கொண்டே முழுவீச்சில் இயங்கிகொண்டிருக்கும்  நிலை சக்தி எனும் நிலை.சக்தி அலைகளை உண